கணவன், மனைவி இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சனையை சரி செய்ய, இந்த இரண்டு பொருளை இப்படி பயன்படுத்தினால் போதும். கணவன், மனைவி பிரச்னைக்கு எளிய பரிகாரம்.

- Advertisement -

இல்லறம் சிறக்க கணவன் மனைவி இருவருமே ஒற்றுமையுடன், அன்னோன்யமாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும். இவர்களுக்கு இடையே ஒரு பரஸ்பர அன்பு இருந்தால் அங்கு எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து முன்னேறி விடலாம். ஆனால் இருவருக்கும் இடையே அந்த பரஸ்பர அன்பு இல்லாது போனால் எத்தனை பெரிய வசதி படைத்த குடும்பமாக இருந்தாலும் அங்கு நிம்மதி என்பததே இருக்காது. இப்படி கணவன் மனைவி இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க இந்த ஒரு எளிய பரிகாரம் செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குடும்பம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் கணவன், மனைவி இருவருக்குள்ளும் நல்ல ஒரு புரிதல் இருக்க வேண்டும் ஒருவர் மீது இன்னொருவர் நம்பிக்கையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும். அதே நேரத்தில் சின்ன சின்ன தவறுகளை எல்லாம் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்து சரி செய்து கொள்ள வேண்டும். இதை கணவன் மனைவி இருவருமே செய்ய வேண்டும். இப்படியான வாழ்க்கையை பார்த்து வளரும் குழந்தைகளும் நல்ல நிலையில் வளருவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரம் அன்பாக இருக்கும் கணவன், மனைவி கூட சில நேரங்களில் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் பொழுது சிடு சிடு வென்று பேசி விடுவார்கள். ஏன் பேசுகிறோம் எதற்கு பேசுகிறோம் என்று கூட தெரியாது. எதை பேச ஆரம்பித்தாலும் கடைசியில் சண்டையில் தான் போய் முடியும்.

இதற்கு காரணம் வீடு மற்றும் அவர்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தான். இதை தான் நேரம் சரியில்லாமல் போனாலும் இப்படி ஆகும் என்று சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது இந்த மனநிலை மாறி இருவருக்குள்ளும் நல்ல அன்னோன்யம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

கணவன், மனைவி பிரச்னை தீர எளிய பரிகாரம்
இதற்கு இரண்டு கிராம்பு , இரண்டு கற்பூரம் இரண்டையும் ஒரு செப்பு தட்டில் எடுத்துக் வைத்து கொள்ளுங்கள். இதில் இந்த இரண்டு பொருட்களையும் வைத்து வீட்டில் உள்ள அனைத்து இடங்களுக்கும் கற்பூர தீபராதனை காட்டுவது போல அப்படியே பற்ற வைக்காமல் வீடு முழுவதும் காட்ட வேண்டும்.

அதன் பிறகு இதை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து வைத்து, கற்பூரத்தை பற்ற வைத்து அதில் கிராம்பை எரித்து விடுங்கள். இது முழுவதுமாக எரிந்து விட வேண்டும். அதன் பிறகு தட்டை கழுவிய பின்பு தான் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இந்த பரிகாரத்தை மாலை வேளையில் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்தால் மிகவும் நல்லது. முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் செய்து கொள்ளுங்கள். அது எந்த நாள் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் செவ்வாய்க் கிழமையில் ஆரம்பித்தால் வாரம், வாரம் செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: லட்ச லட்சமாக கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கூட கஷ்டம் இல்லாமல் திருப்பி அடைத்து விடலாம். உங்கள் கையால் இந்த 1 பழத்தை தானம் கொடுத்தால்.

இந்த பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள், எதிர்மறையாற்றல் அனைத்தும் நீங்கி வீட்டில் இருப்பவர்களின் மனநிலையும் மாறி நல்ல ஒரு அமைதியான சூழல் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து குடும்பத்தில் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழுங்கள்.

- Advertisement -