லட்ச லட்சமாக கல்யாணத்துக்கு வாங்கிய கடனை கூட கஷ்டம் இல்லாமல் திருப்பி அடைத்து விடலாம். உங்கள் கையால் இந்த 1 பழத்தை தானம் கொடுத்தால்.

cash2
- Advertisement -

இன்று நமக்கு லட்சம் லட்சமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை அமைவது எதற்கு. ஒன்று கல்யாணத்திற்கு, இரண்டாவது மருத்துவ செலவிற்கு, மூன்றாவது குழந்தைகளின் மேல் படிப்புக்கு, குழந்தைகளின் மேல்படிப்புக்கு கூட காசு பணம் குறைவாக இருந்தால், குழந்தைகள் படிக்க விரும்பும் படிப்பை கூட மாற்றிக் கொள்கின்றோம். ஆனால் திருமணத்திற்கும், மருத்துவ செலவுக்கும் இன்றைய சூழ்நிலையில் கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இப்படி லட்ச லட்சமாக வாங்கிய கடனை கூட சிரமம் இல்லாமல் திருப்பிக் கொடுக்க ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாகவே எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் கல்யாணம் செய்த வீட்டில் கருப்பு இருக்கும் என்று சொல்லுவார்கள்.

கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய தானம்:
அதாவது கல்யாணத்திற்கு நிறைய பணம் செலவு செய்திருப்பார்கள். வீட்டில் பணத்தட்டுப்பாடு இருப்பதை தான், கருப்பு என்ற வார்த்தையை ஒப்பிட்டு, காசு பணம் இல்லாத, இருள் சூழ்ந்த ஒரு சூழ்நிலை என்று கூட வைத்துக் கொள்ளலாம். இந்த கடனை சுலபமாக அடைப்பதற்கு தான் அந்த காலத்திலேயே கல்யாண வீடுகளில், கல்யாணம் முடிந்தவுடன் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு சாத்துக்குடி பழத்தை தானமாக கொடுப்பார்கள். சில வருடங்கள் பின்னோக்கிப் போனால் ஒரு சுருக்கு பையில், ஒரு சாத்துக்குடி பழம், வெற்றிலை பாக்கு போட்டு கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது.

- Advertisement -

நம்மில் நிறைய பேர் சொல்லுவோம் சாத்துக்குடி பழம் தான் விலை மலிவானது, அதனால் தான் அதை கல்யாணத்திற்கு கொடுக்கிறார்கள் என்று. அப்படி கிடையாது. கல்யாணத்திற்கு வாங்கிய கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்றால் சாத்துக்கொடியை தானமாக கொடுக்க வேண்டும் என்ற ஒரு சூட்சமம் அவர்களுக்கு தெரிந்ததால் தான் அந்த பழத்தை தானம் கொடுத்தார்கள். இப்படி வீடு கிரகப்பிரவேசம் மற்ற விசேஷங்களுக்கு கூட வீட்டிற்கு வருபவர்களுக்கு சாத்துக்குடி பழத்தை தானமாக கொடுக்கலாம்.

உங்களுடைய வீட்டு திருமணத்தில் நீங்கள் தேங்காய், மட்டை தேங்காய், தாம்பூலம் என்று எதை திருமணத்திற்கு வருபவர்களுக்கு கொடுத்தாலும், அதோடு ஒரு சாத்துக்குடி பழத்தையும் போட்டு கொடுங்க. உங்களுடைய திருமண கடன் சீக்கிரம் படிப்படியாக குறையும். திருமணத்திற்கு மட்டும் தான் இந்த சாத்துக்குடி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. திருமணம் வைத்திருப்பவர்கள் இதை பின்பற்றலாம்.

- Advertisement -

பிறவி கடனால் கஷ்டம், இந்த பிறவியில் ஏதேதோ ஆடம்பர செலவுக்காக கடன் வாங்கி கடன் சுமையில் மூழ்கி இருப்பவர்கள், உங்களால் முடிந்த சாத்துக்குடி பழத்தை வாங்கி ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். உடல் சுகம் இல்லாமல், கையில் பணம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த சாத்துக்குடி பழத்தை தானம் கொடுக்கலாம். ஒரு மூட்டை சாத்துக்குடி பழத்தை வாங்கி ஒரு முதியோர் இல்லம், ஒரு ஆசிரமத்திற்கு தானம் கொடுக்கலாம். இந்த சாத்துக்குடி பழம் தானம் உங்களுடைய பிறவி கடனிலிருந்தும் காப்பாற்றும். நீங்கள் கைநீட்டி வாங்கிய கடன் பிரச்சனையிலிருந்தும் உங்களை காப்பாற்றி கை தூக்கி விடும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே: இந்த புதன்கிழமை வெற்றிலையின் மேல் இதை தடவினால், அடுத்த புதன்கிழமைக்குள் பணக்கஷ்டம் எல்லாம் தீரும். வராத பணம் கூட வீடு தேடி வரும்.

சாத்துக்குடி பழமும் எலுமிச்சம் பழத்துக்கு இணையானது தான். ஆகவே உங்களுக்கு எந்த கடன் கரைய வேண்டும் என்று வேண்டுதல் வைக்கிறீர்களோ, அந்த வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டே சாத்துக்குடி பழத்தை வாங்குங்கள். அந்த வேண்டுதலை நினைத்துக் கொண்டே சாத்துக்குடி பழத்தை தானமாக கொடுங்கள். நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும் என்ற காலத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -