டீ குடிக்கும் வேளையில் இட்லி மாவு வைத்து இப்படி சுவையான குட்டி போண்டா செய்து, டீயுடன் சேர்த்து சாப்பிடுங்கள் மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும்

bonda
- Advertisement -

மாலை வேளை வந்தாலே சிறிதளவு பசி எடுக்க ஆரம்பிக்கும். இது அனைவருக்கும் வழக்கமாக இருக்கின்ற ஒரு விஷயம் தான். இதனால் தான் அந்த வேளையில் டீ குடிக்கும் பழக்கத்தை அனைவரும் வைத்துள்ளனர். அவ்வாறு மாலை நேரத்தில் குழந்தைகளுக்கும் சாப்பிட ஏதேனும் வேண்டுமென்று தோன்றும். இதுபோன்ற நேரங்களில் வீட்டில் இருக்கும் இட்லி மாவு வைத்து இப்படி சுவையான கார போண்டாவை ஒரு முறை செய்து பாருங்கள். இதனை செய்வதற்கென்று தனியாக பொருட்கள் எதுவும் தேட வேண்டாம். அதுபோல இதனை செய்ய ஐந்து நிமிடம் மட்டும் போதும். அவ்வளவு ஈஸியான மற்றும் சுவையான ஒரு டிஷ்ஷை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 2 கப், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், ரவை – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 4, பூண்டு – ஒரு பல், உப்பு – முக்கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் நான்கு வரமிளகாயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் சுடு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு பல் பூண்டு மற்றும் ஊறவைத்த வரமிளகாய் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இரண்டு கப் இட்லி மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் முக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் கெட்டியான மாவு பதத்திற்கு வருவதற்காக இவற்றுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு ஸ்பூன் ரவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கலவையை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் சின்ன சின்ன உருண்டையாக போட வேண்டும். சிறிது நேரத்தில் இந்த உருண்டைகள் அனைத்தும் பொன்னிறமாக மாற ஆரம்பிக்கும்.

அப்போது இவற்றை வெளியே எடுத்து மற்றொரு தட்டிற்க்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கார சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொண்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் மாலை வேலையை இனிமையாக மாற்ற டீயுடன் இந்த சுவையான கார போண்டாவை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

- Advertisement -