இந்த எண்ணெய் உங்களிடம் இருந்தால் போதும், இளநரையை மறைக்க இனி இந்த டையெல்லாம் மறந்தும் கூட பயன்படுத்த மாட்டிங்க. ரொம்ப ஈஸியா இள நரையை போக்கிடலாம் கவலையை விடுங்க.

- Advertisement -

இப்பொழுது இருக்கும் தலைமுறையில் வயதானவர் யார், இளம் வயதினர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இந்த இளநரை பெறும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்ன குழந்தைகளுக்கு கூட இளநரை தோன்றி பார்க்க வயதான தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. ஒரு காலத்தில் 40, 45 வயதை கடந்தவர்களுக்கு தான் ஒன்று இரண்டு வெள்ளை முடி தோன்றும். இப்போதெல்லாம் பள்ளி குழந்தைகள் முதலே இந்த நரைமுடி பிரச்சனை அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான். நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த இளநரை தோன்றி விட்டால், அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கரிசலாங்கண்ணி இளநரையை போக்க இதை விட ஒரு சிறந்த ஒன்று இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த கரிசிலாங்கண்ணியை அப்படியே அரைத்து தலையில் தேய்க்கும் போது அதிக குளுமையாகி விடும். இதனால் சைனஸ் தொந்தரவு இருப்பவர்களால் பயன்படுத்த முடியாது. ஏன் சாதாரணமானவர்களுக்கு கூட சில நேரம் இதை பச்சையாக அரைத்து தேய்க்கும் போது ஒத்துக் கொள்ளாது. எனவே அதை நாம் தினமும் பயன்படுத்தும் எண்ணையில் கலந்து தேய்க்க வேண்டும். எண்ணெயில் கலப்பது என்றால் அதை அப்படியேவும் கலந்து விட முடியாது.

- Advertisement -

அதில் ஒரு சில பொருட்களை சேர்த்து கலக்கலாம் அந்தப் பொருள்களும் வேறொன்றுமில்லை முடி வளர்ச்சிக்கு இன்னொரு அதிமுக்கியமான கருவேப்பிலை அடுத்து நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் இளநரை மட்டுமல்ல நம் வயதான தோற்றத்தை கூட தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த மூன்றையும் வைத்து இளநரையை தடுக்கும் எண்ணெய் இப்போது நாம் தயார் செய்து கொள்ளலாம்.

இதற்கு ஒரு கட்டு கரிசலாங்கண்ணி கீரையை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக ஆய்ந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை எடுத்து கொள்ளுங்கள. ஐந்து நெல்லிக்காயை உள்ளிருக்கும் விதையை நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இது மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பேஸ்ட் ஆக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது எண்ணெய்யை காய்ச்சி விடுவோம். அடுப்பை பற்ற வைத்து அரை லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடான உடன் அரைத்து வைத்த கரிசலாங்கண்ணி கருவேப்பிலை, நெல்லிக்காய் அரைத்த விழுதை இதில் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும் .இதில் சேர்த்த இந்த கலவை கருப்பு நிறமாக மாறும் வரை நன்றாக கொதிக்க விட்ட பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே ஆறட்டும். நன்றாக ஆறிய பிறகு இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து வரும் போது இளநரை மறைவதோடு நல்ல அடர்த்தியான கருப்கருவென முடியும் வளரும். இளநரையை மறைக்க டை பயன்படுத்துகிறேன் என்று ஒரு முடி இருக்கும் போது டை அடிக்க ஆரம்பித்து மொத்த முடியும் வெள்ளையாக ஆக்கிக் கொள்ளாமல், இது போல இயற்கையான முறைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பயனடையுங்கள்.

- Advertisement -