தினமும் இந்த பொடியை போட்டு தேய்த்து குளித்தால், வயசு கூட கூட, உங்களுடைய இளமையும் அழகும் கூடிக் கொண்டே செல்லும்.

face13
- Advertisement -

சில அழகு குறிப்புகள், சில பேருக்கு மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகும். சில பேருக்கு செட்டாகாது. ஆனால் இன்று நாம் பார்க்கக்கூடிய இந்த அழகு குறிப்பு எல்லோருக்கும் செட்டாக கூடிய அழகு குறிப்பாக இருக்கப் போகின்றது. ஒரு மாதம் தொடர்ந்து இந்த குளியல் பொடியை பயன்படுத்தி குளித்து பாருங்கள். உங்களுடைய சருமம் எப்படி அப்படியே பளிங்குகள் போல ஜொலிக்கிறது என்பதை உங்களால் நிச்சயம் உணர முடியும். ஒரு நாள் இந்த குளியல் பொடியை பயன்படுத்திய உடனே ரிசல்ட் தெரியும். அதில் மாற்றமில்லை. ஆனால் அந்த பளபளப்பான சருமம் நிரந்தரமாக உங்கள் உடம்பில் தங்க வேண்டும் என்றால், ஒரு மாதம் இந்த குறிப்பை நீங்கள் கடைபிடித்து வர வேண்டும். ஆயுசுக்கும் இந்த அழகு தேவை என்றால் தினமும் இந்த குளியல் பொடியை தேம்த்து குளிக்கலாம். உங்களுடைய அழகை மேலும் அழகாக கூடிய அந்த அழகு குறிப்பு என்ன தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா. வாங்க குறிப்பை பார்த்து விடலாம்.

இளமையாக இருக்க குளியல் பொடி தயார் செய்யும் முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களையும் அளக்க சின்ன டம்ளர் தேவை. அந்த டம்ளரில் பின் சொல்லக்கூடிய பொருட்களை எல்லாம் அளந்து எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். மைசூர் பருப்பு – 1 டம்ளர், பச்சரிசி – 1 டம்ளர், பாசிப்பயறு – 1 டம்ளர், கடலைப்பருப்பு – 1/2 டம்ளர், ஓட்ஸ் – 1/2 டம்ளர், முல்தானி மெட்டி பொடி- 1/2 டம்ளர், பாதாம் – 15, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்க வேண்டும். முல்தானி மெட்டி பொடியாக இல்லாமல் உங்களுக்கு நாட்டு மருந்து கடையில் முழுசாக கிடைத்தால் அதை வாங்கி போட்டு அரைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

- Advertisement -

இந்த பொடியை கொரகொரப்பாக அரைக்க கூடாது. ரொம்பவும் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இந்த பொடியோடு உங்களுக்கு தேவைப்பட்டால் கஸ்தூரி மஞ்சள் அல்லது சாதாரண மஞ்சள் – 2 ஸ்பூன் அளவு சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளலாம். மஞ்சள் அலர்ஜி என்பவர்கள் மஞ்சளை இதில் சேர்க்க தேவை கிடையாது. இதை அரைத்த பின்பு நன்றாக ஒரு பேப்பரில் கொட்டி ஆரவைத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி தண்ணீர் படாமல் ஸ்டோர்ர் செய்து வைத்தால் 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாது.

குளியல் பொடியை பயன்படுத்தும் முறை:
தினமும் இந்த குளியல் பொடியை பயன்படுத்தலாம். வழக்கம்போல சோப்பு போட்டு தேய்த்து குளித்து விடுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த குளியல் பொடியை போட்டு வெறும் தண்ணீரை ஊற்றி கரைத்து அந்த பேஸ்டை முகம் கை கால் உடல் முழுவதும் பூசி ஜென்டில் ஆக நன்றாக மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, பிறகு இரண்டு நிமிடம் கழித்து வெறும் தண்ணீரை ஊற்றி குளிக்கும் போது உங்களுடைய சருமத்தில் நல்ல வித்தியாசத்தை உணருவீர்கள். சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் எல்லாம் நீங்கி சருமம் வெள்ளையாக மாறி இருக்கும்.

- Advertisement -

தேவை என்றால் இந்த பொடியை முகத்திற்கு பேக் போல போட்டு பத்து நிமிடம் கழித்தும் அதை கழுவிக்கொள்ளலாம். முகத்தில் இருக்கக்கூடிய சரும பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு சீக்கிரம் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய சருமம் அப்படியே பாலிஷ் போட்டது போல ஜொலி ஜொலிக்க தொடங்கி விடும். அந்த அளவுக்கு இந்த குளியல் பொடிக்கு பவர் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: 10 நிமிடத்தில் பளபளன்னு பளிச்சிட வைக்கும் பப்பாளி பழம்! பல 100 ரூபாய் நோட்டுகளை மிச்சப்படுத்தும் எளிய வீட்டு ஃபேஸ் பேக்!

தேவை என்றால் இன்னமும் கூடுதல் அழகை பெற வேண்டும் என்றால் இந்த குளியல் பொடியில் தேங்காய் பால் ஊற்றி கரைக்கலாம். அப்படி இல்லை என்றால் தக்காளி பழச்சாறு, காய்ச்சிய பால், தயிர் என்று உங்களுடைய சருமத்திற்கு எது செட் ஆகுமோ அதை ஊற்றி கலந்து கூட உடல் முழுவதும் பூசி குளித்து வர நீங்கள் நீண்ட நாட்களுக்கு இளமையாகவே இருப்பீர்கள். இந்த எளிமையான குறிப்பு பிடிச்சிருந்தா கட்டாயம் நீங்க முயற்சி செய்து பார்க்கணும். உங்களுடைய அழகுக்கு 100% கேரன்டி.

- Advertisement -