உங்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சி முகத்தில் தெரிகிறதா? இளமையான தோற்றத்தை 2 வாரத்தில் பெறுவதற்கு இந்த 3 விஷயத்தை செய்யுங்கள்!

coffee-banana-face
- Advertisement -

ஒருசிலருக்கு வயதுக்கு மீறிய முதிர்ச்சியான தோற்றம் ஏற்படுகிறது. 25 வயதுடைய ஆண் அல்லது பெண் 30 வயது தோற்றத்துடன் காணப்படும் பொழுது அவர்களுடைய தன்னம்பிக்கை இயல்பாக குறைகிறது. இப்படி உங்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சி உங்கள் முகத்தில் தோன்ற ஆரம்பித்தால், மீண்டும் இளமையான தோற்றத்தை மீட்டெடுப்பதற்கு பார்லருக்கு போகாமல் என்னவெல்லாம் எளிதாக வீட்டிலேயே செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வயதுக்கு மீறிய முதிர்ச்சி ஒரு மனிதனுக்கு ஏற்படும் பொழுது அவன் இயல்பாகவே தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்து சோர்வுறுகிறான். இது மேலும் மேலும் முதிர்ச்சியான தோற்றத்தை அதிகரிக்க செய்யுமே தவிர, குறைய செய்துவிடாது, எனவே சோர்வை தவிர்த்து உற்சாகத்துடன், தன்னம்பிக்கையுடன் இருக்க முதலில் பழக வேண்டும்.

- Advertisement -

மகிழ்ச்சியான மனநிலை மற்றும் ஆரோக்கியமான உணவு, நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை ஒரு மனிதனுடைய இளமையை தக்க வைத்து கொள்ள உதவக்கூடிய காரணிகளாக இருக்கின்றன. இக்காரணிகளில் ஒன்றை நீங்கள் இழந்தாலும் உங்களுக்கு முதிர்ச்சியான தோற்றம் வந்துவிடும். இதிலிருந்து எளிதாக தப்பிப்பதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி என்ன செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.

முதலாவதாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துங்கள். மலஜலம் கழிக்காமல் காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். காலை உணவை முடித்து பின்பு சிறிது நேரம் ஓய்வு எடுங்கள். அந்த சமயத்தில் ஒரு ஸ்பூன் காபி தூளுடன் தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெய் விட்டு பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். இதை முகம் முழுக்க தடவி 20 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு அலம்பி கொள்ளுங்கள். இரண்டாவதாக வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பன்னீர் கலந்து முகம் முழுவதும் பேக் போடுங்கள்.

- Advertisement -

20 நிமிடம் கழித்து முகம் நன்கு உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் லேசாக அழுத்தம் கொடுக்காமல் முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இறுதியாக மூன்றாவதாக அரிசி ஊற வைத்த தண்ணீர் இருந்தால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் டிஷ்யூ பேப்பர் அல்லது சுத்தமான டவல் கொண்டு நனைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை முகத்தின் மீது லேசாக அழுத்தி மூடி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் முகத்தை திறந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு செய்த பின்பு முகத்திற்கு சோப்பு அல்லது பவுடர் எதுவும் பயன்படுத்தக் கூடாது. தொடர்ந்து இது போல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வாருங்கள். 2 வாரத்தில் நீங்கள் எவ்வளவு முதிர்ச்சியான தோற்றத்துடன் இருந்தாலும், உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள், திட்டுக்கள், மேடு பள்ளங்கள் அனைத்தும் நீங்கி அப்பழுக்கற்ற நல்ல ஆரோக்கியமான சருமம், இளமையான பொலிவான தோற்றம் கொண்ட சருமத்தை எளிதாக மீட்டு எடுத்து விடலாம். இந்த அற்புதமான குறிப்பை நீங்களும் செலவில்லாமல் வீட்டிலேயே ட்ரை பண்ணி பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -