என்றென்றும் இளமையாக இருக்க இந்த ஒரு டீ போதும். இதனை வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து குடித்து வர உங்கள் முதுமை மறைந்து எப்பொழுதும் அழகாக இருக்கலாம்

sulaimani-tea
- Advertisement -

இன்றைய காலத்தில் முப்பது வயது ஆன உடனே ஒவ்வொருவருக்கும் பலவிதமான உடல் பிரச்சனைகள் வர ஆரம்பித்து விடுகிறது. அதிலும் பெண்களுக்கு அதிகமாக உடம்பில் இரத்தம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதாவது ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் பெண்கள் மிகவும் சீக்கிரத்தில் வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்பட்டு உள்ளதால் அதனைத் தொடர்ந்து பலவித நோய்களும் வர ஆரம்பித்து விடுகிறது. ஒரு வீட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் தான் அவர்களின் குடும்பமும் நல்ல செழிப்பாக இருக்கும். எனவே இவ்வாறு உங்கள் ஆரோக்கியத்திற்கு பிரச்சனையாக இருக்கும் இந்த உடல் உபாதைகளை சரி செய்ய இந்த ஒரு டீ போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். தனது உடலில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றத்தை கூட எளிதாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் முகத்தில் ஏற்படும் சுருக்கம், முடி கொட்டுதல் இது போன்ற பிரச்சனைகளையும் அவர்கள் சமாளிப்பது மிகவும் கடினமாகத் தான் இருக்கும்.

- Advertisement -

அவ்வாறு இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்யவும், உங்கள் உடலை பளபளவென்று வைத்துக்கொள்ளவும், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கவும் காலையில் நீங்கள் குடிக்கும் இந்த டீயை மாற்றி இவ்வாறு செய்து பாருங்கள். அதற்கு முதலில் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருள் என்னவென்றால் செம்பருத்தி பூ.

இதனை செய்வதற்கு முதலில் இந்த செம்பருத்திப் பூவை எடுத்துக் கொண்டு, அதன் காம்பு பகுதி மற்றும் மகரந்த பகுதியை மட்டும் விட்டுவிட்டு, அதன் இதழ்களை தனியாக பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் இவற்றை தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதில் எந்தவிதமான அழுக்குகள், பூச்சிகள் இருந்தாலும் அவை சுத்தமாகிவிடும்.

- Advertisement -

பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இந்த பாத்திரத்தை வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும் அதில் இரண்டு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும். பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள செம்பருத்தி இதழை இதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் ஒரே நிமிடத்தில் இந்த செம்பருத்திப் பூ தண்ணீரின் சூட்டில் சுருங்கி, அதன் நிறம் வெண்மையாக மாறி விடும். பிறகு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அதன்பின் இந்த டீயை வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான செம்பருத்தி டீ தயாராகிவிட்டது. இதனை தொடர்ந்தும் குடிக்கலாம், அல்லது வாரத்திற்கு மூன்று முறை மட்டும் குடிக்கலாம். இது உடம்பிற்கு அவ்வளவு நல்லது. உங்கள் அழகையும், இளமையையும் தக்க வைக்க உதவும்.

- Advertisement -