இளநரை கருமையாக ஹேர் பேக்

grey hair
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் 40 வயதிற்கு மேல் ஆன பிறகு தான் அவர்கள் தலையில் லேசாக முடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்றைய காலத்தில் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதற்கொண்டு பலருக்கும் இந்த இளநரை பிரச்சினை என்பது இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணமாக திகழ்வது ஊட்டச்சக்தியின்மை. இதோடு இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன.

அவை தான் மன அழுத்தம், இரும்புச் சத்துக் குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு கம்மியாக உற்பத்தி ஆகுதல், மேலும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை நேரடியாக தலையில் பயன்படுத்துவது இப்படி சில விஷயங்களை சொல்லிக் கொண்டு போகலாம். இதனால் ஏற்பட்ட நரைமுடியை எளிதில் இந்த ஒரு ஹேர்பாக்கை தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தும் பொழுது அந்த நரைமுடி பிரச்சனை என்பது முற்றிலுமாக படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். இந்த ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல இயற்கையான பொருட்கள் இருக்கின்றன. இந்த பொருட்களை நாம் முறையாக பயன்படுத்துவதன் மூலம் நம் தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கிவிடும். மேலும் இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இது படிப்படியாக தான் நம்முடைய பிரச்சினையை சரி செய்யும். எடுத்த உடனே சரி செய்யாது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஹேர் பேக்கை நாம் பயன்படுத்தும் பொழுது கெமிக்கல் நிறைந்த எந்த பொருட்களையும் உபயோகப்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான சத்து மிகுந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் விரைவிலேயே இந்த பிரச்சினையிலிருந்து நம்மால் வெளியில் வர முடியும்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை நாம் தயார் செய்வதற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது நெல்லிக்காய் பொடி. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஒன்று. இரண்டு ஸ்பூன் அளவு நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் நம் வீட்டில் வளர்க்கக்கூடிய கற்றாழையிலிருந்து உட்பகுதியை மட்டும் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் நம்முடைய தலைக்கு நாம் தேய்க்கும் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை நம்முடைய தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவி 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பிறகு கெமிக்கல் இல்லாத ஷாம்புவாக பார்த்து தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும்.

- Advertisement -

இதை தொடர்ச்சியாக வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவதன் மூலம் தலைமுடியில் இருக்கக்கூடிய நரை பிரச்சினை என்பது படிப்படியாக குறைய ஆரம்பித்து இயற்கையான கருமை நிறத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: முழு உடலையும் வெள்ளையாக்க உதவும் பேக்

மன அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்பவர்களுடைய தலை முடி என்றுமே ஆரோக்கியமாக இருக்கும்.

- Advertisement -