முழு உடலையும் வெள்ளையாக்க உதவும் பேக்

dark skin
- Advertisement -

நிறத்தை வைத்து கிண்டல் செய்யும் பல பேர் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி கிண்டல் கேலிக்கு ஆளானவர்கள் தங்களின் நிறத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய நிறத்தை அதிகரித்துக் கொள்ளவும் அதேசமயம் சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட கருமைகளை நீக்கவும் மிகவும் எளிதான ஒரு பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

சில பேர் பிறக்கும் பொழுதே கருத்த நிறத்துடன் பிறந்திருப்பார்கள். சில பேர் பிறக்கும்போது நல்ல நிறத்தில் இருந்தாலும் வளர வளர அவர்களின் நிறம் கருத்துப் போயிருக்கும். இப்படி எப்பேற்பட்ட கருமை நிறமாக இருந்தாலும் அந்த கருமை நிறத்தை மாற்ற வேண்டும், தாங்களும் வெள்ளையாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் எந்த வித கெமிக்கல் நிறைந்த கிரீம்களையும் பயன்படுத்தாமல் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து தங்கள் நிறத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

இந்த பேக்கை நீங்கள் உடல் முழுவதும் உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் உபயோகப்படுத்தி பார்த்துக்கொண்டு பிறகு முழு உடலுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறை சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதை நமக்கு எந்த இடத்தில் கருமை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நிமிடமாவது மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதில் இருக்கக்கூடிய தக்காளிக்கு இயற்கையிலேயே நம்முடைய சருமத்தை பொழிவாக்கக்கூடிய தன்மை இருக்கிறது. மேலும் கருமை நிறத்தை போக்குவதற்கு இந்த தக்காளி மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்த தக்காளியில் பல சத்துக்கள் இருக்கிறது என்பதால் நம்முடைய சருமத்திற்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.

- Advertisement -

இதேபோல் தயிர் நம்முடைய சருமத்தை இயற்கையாகவே மாய்ஸ்டரைசாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொண்டு என்றும் இளமையாக இருப்பதற்கு இந்த தயிர் உதவி புரிகிறது. இதில் நாம் சேர்க்கக்கூடிய அரிசி மாவு ஒரு ஸ்க்ரப்பராக பயன்பட்டு நம் உடலில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தையும் நீக்கி நம்முடைய சருமத்திற்கு புதுப்பொலிவை தருகிறது. பேக்கிங் சோடாவும் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கருமைகளை நீக்குவதற்கும் இறந்த செல்களை நீக்குவதற்கும் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: நரை முடி கருமையாக இயற்கை ஹேர் டை

இவை அனைத்தும் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்கள் என்பதாலும் மேலும் இதை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதால் தாராளமாக நாம் இந்த பேக்கை பயன்படுத்தி நம்முடைய நிறத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

- Advertisement -