இளநரையை போக்க எளிமையான டிப்ஸ்

grey hair tips
- Advertisement -

ஒருவருடைய அழகை மேலும் அழகாக காட்டுவதற்கு பெரிதும் துணை புரிவது அவருடைய முடி தான். அந்த முடி கருமையாக இருந்தால் அவர் இளமையாக இருக்கிறார் என்று அர்த்தம். இதே நரைத்து இருந்திருந்தால் அவர் வயதானவர் என்று நினைப்போம். இப்படி ஒருவருடைய இளமையை பற்றி பேசக்கூடிய ஒன்றாக தான் முடி திகழ்கிறது. இன்றைய காலத்தில் முடியை வைத்து ஒருவருடைய வயதை நம்மால் கணக்கீடு செய்ய முடியாது. காரணம் இளம் வயதிலேயே பலருக்கும் நரைமுடி பிரச்சினை என்பது ஏற்பட்டு விடுகிறது. இந்த நரைமுடி பிரச்சினை ஏற்படுவதற்குரிய காரணம் என்ன? எதை சாப்பிட்டால் அதன் தாக்கம் குறையும்? எதை தலைக்கு உபயோகப்படுத்தினால் நரை முடி கருப்பாகும் என்றுதான் இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர வேண்டும் என்றால் அதற்காக சில சத்துக்கள் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கருமையாக இருப்பதற்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய சத்துப் பொருட்களாக காப்பரும் இரும்புச்சத்தும் திகழ்கிறது. இந்த காப்பரும் இரும்புச்சத்தும் குறையும் பட்சத்தில் தான் ஒருவருக்கு நரைமுடி பிரச்சினை என்பது ஏற்படும். இந்த காப்பரும் இரும்புச்சத்தும் குறைவதற்கு முக்கியமான காரணம் உடம்பில் இருக்கக்கூடிய பித்தத்தின் அளவு அதிகரிப்பது தான்.

- Advertisement -

அன்றைய காலத்தில் இது பித்தநரை என்று கூறி கேள்விப்பட்டிருப்போம் அல்லவா? அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு பித்தநரை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிக்கு போக வேண்டாம். உடம்பில் பித்தம் அதிகரித்தால் நரைமுடி பிரச்சினை என்பது ஏற்படும். அந்த நரைமுடி பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் நம்முடைய உணவில் காப்பர் மற்றும் இரும்பு சத்தை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

இந்த காப்பர் இரும்புச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் எதை சாப்பிட வேண்டும்? ஒன்றுமல்ல.. நம் வீட்டில் கண்டிப்பான முறையில் தயிர் இருக்கும். பெருங்காயம் இருக்கும். கருவேப்பிலை இருக்கும். தினமும் காலையில் எழுந்து டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சிறிதளவு தயிரை ஊற்றி இரண்டு இனுக்கு கருவேப்பிலையை போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயத்தை போட்டு நன்றாக ஒரு ஓட்டு ஓட்டிவிட்டு பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி நன்றாக அடித்து மோராக்கி தினமும் குடிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி குடித்து வர உடம்பில் இருக்கக்கூடிய காப்பர் மற்றும் இரும்பு சத்து அதிகரித்து நரைமுடி பிரச்சனையை தீர்க்கும். இதோடு மட்டுமல்லாமல் அனைவரும் கூறுவது போல் அதிகளவு நம்முடைய உணவில் கருவேப்பிலையை நாம் எடுத்துக் கொள்வதன் மூலமும் இந்த இரும்பு மற்றும் காப்பர் சத்தை நம்மால் பெற முடியும். இது உள்ளுக்குள் எடுத்துக் கொள்வது.

நம் தலைக்கு தடவுவதற்கு என்ன செய்யலாம்? அதற்கு இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் பொடியை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே அளவு வல்லாரைக் கீரை பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் தயிர் அல்லது எலுமிச்சம் பழச்சாறு இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை நம்முடைய தலையின் வேர்க்கால்களில் நன்றாக படும் அளவிற்கு தடவ வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தடவுவதற்கு முன்பாக ஐந்து நிமிடமாவது தலையை மசாஜ் செய்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் தலைக்கு ரத்த ஓட்டம் என்பது அதிகரிக்கும். மேலும் அந்த வேர்க்கால்களில் நாம் இந்த பேக்கை தடவுவதன் மூலம் இந்த பேக்கில் இருக்கக்கூடிய சத்துக்களை வேர்க்கால்கள் உறிஞ்சும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு சாதாரணமாக எப்போதும் போல் தலைக்கு குளித்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் இளநரை பிரச்சினையை நம்மால் தீர்க்க முடியும்.

இதையும் படிக்கலாமே: முடி நன்றாக வளர ஷாம்பு தயார் செய்யும் முறை

மிகவும் எளிமையான அதே சமயம் ஆரோக்கியமான அற்புதமான இந்த குறிப்புகளை பயன்படுத்தி இளநரை பிரச்சினையில் இருந்து விடுபடுவோம்.

- Advertisement -