நீங்கள் இழந்த சொத்துக்களை, மரியாதைகளை மீட்டெடுக்கவும் இழுபறியாக இருக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் இந்த ஒன்பது வார பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைத்து விடும்

soththu
- Advertisement -

“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப நமக்கு வரவேண்டிய சொத்துகள், பெயர், புகழ் நம்மைவிட்டு மற்றவருக்கு சென்றுவிடும். இவ்வாறு நமக்கு சொந்தமான அனைத்தும் நம் கண்ணெதிரிலேயே மற்றவருக்கு செல்லும் பொழுது அதனை பார்த்துக் கொண்டு நம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் சூழ்நிலை மிகவும் கொடுமையானதாக இருக்கும். இவற்றை எவ்வாறு மீட்டெடுப்பது, நமக்கு வந்து சேரவேண்டிய இவற்றை நம்மிடம் எப்படி திரும்பக் கொண்டுவருவது என்ற பல யோசனைகள் பலரது மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும். இவற்றை மற்றவரிடம் சண்டை போட்டோ, வழக்குகள் செய்தோ நாம் எளிதாக பெற முடியாது. எனவே இந்த ஒன்பது வார கால பைரவர் பூஜை செய்யும் பொழுது நமக்கு உண்டான அனைத்து உரிமைகளும், சொத்துக்களும் நம்மிடம் வந்து சேரும். வாருங்கள் இந்த பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வெள்ளி மற்றும் சனி இவை இரண்டு நாட்களில் இந்த பூஜையை தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். அதற்காக வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காலை 6 இலிருந்து 7, மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு 8 லிருந்து 9 இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் மையப் பகுதியில் நின்று கொண்டு, அங்கு ஒரு தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் வாழை இலையை வைக்க வேண்டும். பின்னர் இரண்டு கைப்பிடி பச்சை அரிசியை கையில் எடுத்துக் கொண்டு, கண்களை மூடி குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

எனக்கு சேர வேண்டிய அனைத்து உரிமைகளும், சொத்துக்களும் என்னிடம் வந்து சேர வேண்டும். எனது சொத்து சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாக அமைய வேண்டும். என்று உங்கள் வேண்டுதலை இறைவனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு இந்த தாம்பூலத் தட்டை வீட்டின் ஒரு பகுதியில் ஓரமாக மற்றவர்கள் கண் படும் படி வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு மறுநாள் காலை இந்த அரிசியை ஓடுகின்ற நீரில் விட்டுவிட வேண்டும். நீரில் உள்ள மீன்கள் இந்த அரிசியை சாப்பிடும் பொழுது நமது பாவங்கள் அனைத்தும் தீர்ந்து நமது வேண்டுதல் நிறைவேறும். அப்படி முடியாவிட்டால் உங்கள் வீட்டின் அருகிலேயே காக்கை, குருவிகளுக்கு உணவாக அளிக்க வேண்டும்.

பிறகு காலபைரவர் இருக்கும் கோவிலுக்கு சென்று, ஆறு வெற்றிலைகளின் மீது மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதன் மீது 6 புதிய அகல் விளக்குகளை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்ற வேண்டும். பிறகு காலபைரவருக்கு பிடித்த சிவப்பு நிற மலர்களை ஒவ்வொன்றாக வெற்றிலையின் மீது வைக்க வேண்டும். அதன்பின் காலபைரவருக்கு பிடித்த வாசனை திரவியங்களான புணுகு, அரகஜா போன்றவற்றை படைத்து, தீபம் ஏற்றி கால பைரவரையும் மனதார வணங்கி வர, உங்கள் பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் சக்தி இந்த கால பைரவருக்கு இருக்கிறது. இவ்வாறு 9 வாரங்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து வர விரைவில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -