பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய இந்த 1 பொருளை வாங்கிக் கொடுத்தால், கை நிறைய சம்பளத்தோடு நிரந்தரமான நல்ல வேலை உடனே கிடைக்கும்.

sivan-abishegam
- Advertisement -

நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் நாம் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கின்றது. ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, பணம் சம்பாதிப்பவர்க்கு மட்டுமே இன்று முன்னுரிமை. அவர்களுக்கு மட்டுமே மதிப்பு என்று ஆகிவிட்டது. நல்ல வேலை கிடைக்க நிரந்தர வேலை கிடைக்க கைநிறைய சம்பளத்தை சம்பாதிக்க ஆன்மீக ரீதியாக ஒரு சில வழிபாடுகள் உங்களுக்காக.

முதல் வழிபாடாக சிவபெருமானை மனதில் நினைத்து கொண்டு பிரதோஷ வழிபாட்டை தெரிந்துகொள்வோம். சிவபெருமானின் மனம் குளிரும்படி பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு இளநீர் வாங்கிக் கொடுங்கள். இளநீர் அபிஷேகம் செய்யும்போது அந்த சிவபெருமான் மனம் குளிர்ந்து உங்களுக்கு நல்லதொரு வேலையை நிரந்தரமாக கொடுப்பார் என்பது ஒரு நம்பிக்கை.

- Advertisement -

இளநீரை வாங்கி சிவபெருமானுக்கு பிரதோஷத்தன்று அபிஷேகத்திற்கு கொடுத்துவிட்டு, பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் சன்னிதானத்தில் அமர்ந்து உங்கள் மனதிற்கு பிடித்த வேலை எதுவோ, அந்த வேலையை உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று மனதார தியானம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதோஷம் வந்தால் தவறவிடாதீர்கள். ஒரே ஒரு இளநீர் வாங்கி கொடுத்தாலும் அது உங்களுக்கு பல மடங்கு நன்மையை கொடுக்கும்.

அடுத்தபடியாக வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காலை 7 மணியிலிருந்து 8 மணி, அந்த நேரத்தை தவற விட்டால் மதியம் 2 மணியிலிருந்து 3 மணி, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அரசமரம் உள்ள இடமாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அரச மரத்தடியில் விநாயகர் இருந்தால் இன்னும் சிறப்பு. அரசமரத்தை வலமிருந்து இடமாக 3 முறை சுற்றிவந்து, அரசமரத்திற்கு முன்பு அமர்ந்து உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்று குலதெய்வத்தையும் அந்த விநாயகரையும் நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்தப் பிரார்த்தனையை முடித்துவிட்டு, அந்த அரச மரத்திலிருந்து ஒரே ஒரு இலையை எடுத்து உங்கள் வீட்டிற்கு வரவேண்டும். கீழே உதிர்ந்த இலையை எடுத்தாலும் தவறு கிடையாது. வீட்டிற்கு வந்து பூஜையறையில் அமர்ந்து அரசமரத்தை இலையில் உங்களுக்கு என்ன வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை அந்த அரச மர இலையில் சிவப்புநிற பேனாவால் எழுத வேண்டும்.

எந்த வேலை என்பதே உங்களுக்கு தெரியவில்லை என்றால், ‘நல்ல வேலை நிரந்தரமாக வருமானத்தோடு, கிடைக்க வேண்டும்’ என்று எழுதி அந்த அரச இலையை சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள்.

தினமும் காலையில் எழுந்து சுவாமி கும்பிடும் போது விநாயகரிடமும், உங்கள் குல தெய்வத்திடம், சூரியபகவானிடமும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு அந்த அரச மரத்து இலையை தொட்டு வணங்குங்கள். (நல்ல வேலை கிடைத்த பின்பு அந்த அரச மரத்து இலையை ஏதாவது ஒரு மரத்தடியில் போட்டுவிடலாம்.)

ஒரு சில நாட்களிலேயே உங்களுக்கு இந்த பிரபஞ்சம் நல்ல வேலையை காட்டிக் கொடுக்கும். கை நிறைய சம்பாதிக்க தொடங்குவீர்கள். மனது நிறைவாக இருக்கும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -