இழந்த பணம், பொருள், சொத்துக்கள் திரும்ப கிடைக்க கொப்பரைத் தேங்காயைக் இப்படி செய்யுங்கள்!

kopparai-cash
- Advertisement -

தேங்காய் மட்டும் தெய்வீகத் தன்மையை கொண்டுள்ள பொருளல்ல! அதிலிருந்து கிடைக்கும் கொப்பரை கூட விசேஷமான சக்திகளையும், பண்புகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. நம் வீட்டு விசேஷங்களில் நிகழ்த்தப்படும் ஹோமங்களில் கூட கொப்பரைத் தேங்காயை பயன்படுத்துவது உண்டு. தோஷங்கள் நீங்க, செல்வ செழிப்பு உண்டாக கொப்பரைத் தேங்காயை ஹோமத்தில் எரிப்பது உண்டு. இத்தகைய மகத்துவம் வாய்ந்த இந்த கொப்பரை தேங்காயை என்ன செய்தால் இழந்த பொருள், பணம், சொத்துக்கள் யாவும் நமக்குத் திரும்பக் கிடைக்கும்? என்கிற சூட்சும ரகசியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

ஒருவருக்கு கொடுத்த பணம் சில சமயங்களில் நம்மிடம் திரும்பி வராமலேயே போய் விடுவது உண்டு. அவர்களின் மீது நாம் நம்பிக்கை வைத்து தான் பணத்தை கொடுக்கிறோம் ஆனால் எல்லாரும், எல்லா நேரத்திலும் அதனை சரியாக திருப்பி செலுத்தி விடுவது இல்லை. ஏதோ ஒரு சமயத்தில், நமக்கு கெட்ட நேரம் இருக்கும் பொழுது நம் பணம் நமக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. இப்படி இழந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு இந்த பரிகாரம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -

அதைப் போல ஒருவரிடம் கொடுத்த பொருள் கூட சில சமயங்களில் நமக்கு திரும்பப் பெற முடியாமல் போய்விடும். ஏதோ ஒரு பொருள் நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு நாம் நம்பி கொடுத்திருப்போம். இதில் குறிப்பாக நகைகளை கூறலாம். நகை, பொருள் போன்ற விஷயங்களை நாம் ஒருவரிடம் நம்பி கொடுத்து அதனை அவர்கள் திரும்பி கொடுக்காமல் சில சமயங்களில் போய்விடுவது உண்டு. சொந்தக்காரர்களிடம் நம்மால் அதனை கேட்கவும் முடியாது, கேட்காமல் இருக்கவும் முடியாது. அப்படியே கேட்டாலும் அவர்கள் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லிக் கொண்டே தட்டிக் கழித்துக் கொண்டிருப்பார்கள். இப்படி இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இந்த கொப்பரை தேங்காய் பரிஹாரம் உதவியாக இருக்கும்.

ஒருவர் அரும்பாடுபட்டு வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உழைத்த பணத்தில் சம்பாதித்த உண்மையான சொத்தை அநியாயமாக அபகரித்து விடுபவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் என்றும் துன்பம் தான் என்கிறது சாஸ்திரம். சொத்து அபகரிப்பு என்பது யார் செய்தாலும் அதற்கு உண்டான தண்டனையிலிருந்து, அவர் என்ன பரிகாரம் செய்தும் தப்பிக்க முடியாது. இப்படி நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை இழந்து நிற்கிறீர்கள்! என்றால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தான் அதன் பலன் நமக்கு முழுமையாக வந்தடையும். எனவே நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து, பக்தி சிரத்தையோடு செய்து பயனடையலாம். ஒரு கொப்பரைத் தேங்காயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நல்ல கொப்பரை தேங்காய்களை நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் சுலபமாக கிடைக்கும். அப்படி வாங்கும் கொப்பரைத் தேங்காயை சிகப்பு நிற துணி அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

அல்லது அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு இதே போல சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். அதற்குள் பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி, கடுக்காய், குண்டு மஞ்சள் போன்ற பொருட்களை போட்டும் வைக்கலாம். கல்லாப்பெட்டி, பீரோ அல்லது பூஜை அறை போன்ற இடங்களில் இதனை வைக்க இழந்த பொருட்கள், சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் திரும்பப் பெறுவீர்கள். இதனால் லட்சுமி தேவி உடைய அருள் கிடைப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.

- Advertisement -