இனம்புரியாத மனக் கவலை. குடும்பத்திற்கு தீங்கு நடக்கப்போவதாக உள்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறதா? அப்போது நீங்கள் கட்டாயம் இதை செய்தே ஆக வேண்டும்.

komatha
- Advertisement -

காரணமே இல்லாமல் சில பேருடைய வாழ்க்கையில் இனம்புரியாத மனக்கவலை இருக்கும். நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப் போவதாக உள்மனது சொல்லிக்கொண்டே இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் எழும். இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது. நிம்மதியாக சாப்பிட முடியாது. நிம்மதியாக வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. ஆண்களை விட வீட்டில் வேலை செய்யாமல் இருக்கும், அதாவது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கக்கூடிய பெண்களுக்கு இப்படிப்பட்ட மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.

sad

இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தாலோ அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்கள் யாருக்கேனும் இருந்தாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய எண்ண ஓட்டத்தில் நிறைய வித்தியாசங்களை உணரமுடியும். வீட்டில் மன அமைதி நிம்மதி இருக்கும். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவது குறையும்.

- Advertisement -

பசு மாட்டின் பால், பசு கோமியம், பசுந்தயிர், பசுநெய், பசுஞ்சாணம் இந்த 5 பொருட்களும் நமக்கு தேவை. பஞ்சகவ்ய விளக்கு செய்வதற்காக இந்த ஐந்து பொருட்களையும் பயன்படுத்துவார்கள். பிரச்சனை உள்ள வீட்டில் இந்த பஞ்ச கவ்விய விளக்கை ஏற்றினாலும் நிச்சயம் நல்லது நடக்கும். இருப்பினும் உங்கள் வீட்டில் எப்போதும் இந்த ஐந்து பொருட்களும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

komatha1

ஒரு சிறிய டம்ளரில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பால், சிறிதளவு கோமியம், சிறிதளவு தயிர், சிறிதளவு சாணம், சிறிதளவு நெய் இந்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து விட்டு உங்கள் வீட்டின் வரவேற்பறையில் வைத்துக் கொள்ளலாம். இந்த கலவையை எந்த நேரத்தில் தயார் செய்து வைக்கிறீர்களோ, அதே நேரத்தில் அடுத்த நாள் இந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரை கொண்டு போய் கால் படாத மண் பாங்கான இடத்தில் ஊற்றி விட்டு மீண்டும் இதே போல் ஐந்து பொருட்களையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இதே போல் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் உள்ளே இருக்கும் எதிர்மறை எண்ணங்களும், உங்கள் ஆழ் மனதில் எழக்கூடிய கெட்ட எண்ணங்களும், நேர்மறையாக மாறிவிடும். கெட்ட எண்ணங்கள் உங்களுடைய மனதில் எழாது. தேவை இல்லாமல் மன நிம்மதி கெடாது. மனதில் அமைதி பிறக்கும். நிம்மதியான தூக்கம் வரும். உங்கள் குடும்பம் லட்சுமி கடாட்சத்துடன் சந்தோஷமாக இருக்கும்.

இதோடு சேர்த்து உங்களுடைய வீட்டில் பசுமாடும் கன்றும் சேர்ந்து இருப்பது போல ஒரு சிலையை வாங்கி வைத்து வழிபடும் வழக்கத்தை கொண்டு வாருங்கள். ஒரு வீட்டிற்கு மன நிம்மதியை தரக் கூடிய சக்தி இந்த கோ பூஜைக்கு உண்டு. இதனால்தான் பசுமாட்டில் இருந்து பெறப்படகூடிய அந்த ஐந்து பொருட்களுக்கும் அவ்வளவு மகத்துவம். நம்பிக்கை உள்ளவர்கள் சுலபமான இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -