இந்த ஓசைகள் மட்டும் உங்கள் வீட்டில் கேட்டது என்றால் தெய்வ சக்தி உங்கள் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். அவ்வாறு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஓசைகள் என்னென்ன தெரியுமா?

sound
- Advertisement -

ஒரு வீடு என்றாலே மகாலட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் கோவிலில் நுழைந்தது போன்று இருக்கிறதே என்று வீட்டிற்கு வருபவர்கள் சொல்லும் வகையில் நமது வீடு இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலரது வீட்டுக்குள் நுழைந்தால் மனது சஞ்லத்துடன் இருக்கும். இவ்வாறான வீடுகளில் எதிர்மறை சக்திகள் நிறைந்த இருப்பதே இதன் காரணமாகும். வீட்டில் உள்ளவர்களுக்கு இதனை சரியாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால் எதிர்மறை சக்திகள் வராமல் இருக்கவும், எதிர்மறை சக்திகளை வீட்டிலிருந்து விரட்டவும் சில எளிய சூட்சுமங்களை நம்மால் செய்ய முடியும். அவ்வாறு நேர்மறை சக்திகளை ஈர்க்கக்கூடிய ஓசைகளை எப்பொழுதும் நம் வீட்டில் கேட்கும்படி செய்ய வேண்டும். அவ்வாறு அவை என்னென்ன ஓசைகள் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi1

திரைப்படத்திலோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியிலோ ஒரு சில ஓசைகள் நம் மனதிற்குள் சென்று நம்மை ஆட்கொள்ளும். அவ்வாறு சோகமான ஓசையைக் கேட்டோம் என்றால் சிறிது நேரம் நமது மனது நம் வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகளில் மூழ்கி மிகவும் சோர்வாக இருப்போம். அதுவே கொஞ்சம் சந்தோஷமான ஓசையைக் கேட்டோம் என்றால் நமது வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து நாமும் மிகவும் சந்தோஷப் படுவோம்.

- Advertisement -

இவ்வாறு சப்தங்கள் நம்மை ஆட்கொள்வது இயற்கையான விஷயமே. அதுபோல வீட்டில் சில ஓசைகள் கேட்பதால் நேர்மறை சக்திகள் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஆன்மீகத்தில் கூறப்படும் ஒரு சில சூட்சம விஷயங்களாகும். இவ்வாறான ஓசைகள் மூலம் நமது மனதில் தன்னம்பிக்கை உண்டாகும், மன வலிமை ஏற்படும், நேர்மறை சக்திகள் வீட்டில் நிறைந்திருக்கும், வீடு எப்போதும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும். வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகளை விரட்டும், பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை வினைகள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும்.

vastu-sound-chimes

முதலில் வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் வளையல் மற்றும் காலில் கொலுசு அணிவதன் மூலம் அவற்றினால் ஏற்படும் ஓசையினால் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும். இதனால் எதிர்மறை சக்திகள் நமது வீட்டினுள்ளே நுழையாமல் இருக்கும். அவ்வாறு வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகளின் சிரிப்பு சத்தமும், அழுகையும் அவர்களின் குறும்புத்தனமான வார்த்தைகளும் வீட்டிற்கு பெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

- Advertisement -

அடுத்ததாகச் சில்லரை நாணயங்களின் ஓசையும் வீட்டிற்கு பெரும் அதிர்ஷ்டத்தையும், நேர்மறை சக்தியையும் கொடுக்கிறது. இதற்காக பூஜை அறையில் ஒரு சிலர் சில்லரை நாணயங்களை குவித்து வைத்திருப்பார்கள். அதனை வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில் குபேரனுக்கோ அல்லது மகா லட்சுமி தேவிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வார்கள். அவ்வாறு சில்லறை நாணயங்கள் சத்தம் வீட்டில் ஒளிப்பது மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்க வல்லது.

coins

அது போல எப்பொழுதும் வீட்டில் நேர்மறை சக்திகளை ஈர்ப்பதற்காக மனதிற்கு அமைதி தரும் மென்மையான இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும். இல்லாவிடில் கந்த சஷ்டி கவசம் மற்றும் ஏதேனும் மந்திரம் உச்சரிக்கும் பாடல்கள், தெய்வசக்தியை போற்றும் பாடல்கள் இவற்றை ஒலிக்கச் செய்யலாம். அது போல மிகவும் முக்கியமாக நமது வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் எப்பொழுதும் நேர்மறையான தாக இருக்க வேண்டும். அந்த வார்த்தைகளின் தாக்கத்தை பொறுத்தே நமது வீட்டில் நேர்மறை சக்தியும். எதிர்மறை சத்தியம் குடி கொண்டிருக்கும்.

- Advertisement -