இந்த உப்பு இல்லை என்றால் உங்களுடைய வீட்டில் ஒரு காரியம் கூட உருப்படியாக நடக்காது. வாழ்க்கையில் டாப்பா வர, இந்த உப்பை வாங்கி டப்பாவில் வையுங்கள்.

indhu-uppu
- Advertisement -

கல்லுப்பை வைத்து நமக்கு நிறைய பரிகாரங்கள் சாஸ்திர ரீதியாகவும் தாந்திரிக ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது. வெறும் கல்லுப்பை எடுத்து அழுகின்ற குழந்தைக்கு திருஷ்டி சுற்றி போட்டால், எந்த அளவுக்கு வேலை செய்யும் என்பது நாம் எல்லோருமே அறிந்த ஒரு விஷயம் தான். கல் உப்பு பரிகாரத்திற்கு அப்படி ஒரு பவர். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த கல்லுப்புக்கு நிகராக, சொல்லப்போனால் ஒரு படி மேலே இருக்கக்கூடிய மற்றொரு உப்பை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த உப்பு இருந்தால் உங்களுடைய வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். நம்ப முடியவில்லையா. ஒருமுறை இந்த உப்பை வாங்கி வீட்டில் வைத்து தான் பார்ப்போமே.

இன்று பரிகாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய அந்த உப்பு எந்த உப்பு தெரியுமா? இந்து உப்பு. ஹிமாலயன் ராக் சால்ட் என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பெரும்பாலும் நிறைய மளிகை கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோரில் இந்த உப்பு கிடைக்கிறது. இந்த உப்பு கல் உப்பு போல ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த உப்பை சமையலுக்கு பயன்படுத்தலாம். தவறு கிடையாது. பிங்க் கலர்ல இருக்கக்கூடிய இந்த உப்பு நிச்சயமா உங்களுடைய வீட்டில் ஒரு பிரகாசத்தை கொண்டு வரும்.

- Advertisement -

இந்த உப்பை வைத்து எதுவுமே செய்ய வேண்டாம். வெள்ளிக்கிழமை அன்று இந்த உப்பை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய உப்பை கொண்டு வந்து ஒரு பீங்கான் ஜாடியில் கொட்டி, சமையலறையில் கல் உப்பு பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது எடுத்து சமையலுக்கு பயன்படுத்துங்கள். இந்த உப்பு ஜாடிக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளுங்கள். பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எனக்கு இருக்கும் பணக்கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் என்று.

உப்பு தீர தீர, ஜாடியில் வாங்கி நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு அதிகப்படியான பண தேவை என்றாலும், நாம் கடன் வாங்க சூழ்நிலையில் தான் இன்று இருக்கின்றோம். உதாரணத்திற்கு பிள்ளையின் படிப்புக்கு, காலேஜில் பீஸ் கட்ட வேண்டும் என்றால் கூட பணத்திற்கு அடுத்தவர்கள் கையை எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலை. அவசர மருத்துவ செலவு, அவசரமாக வேறு ஏதாவது செலவு என்றாலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. அதாவது பெரிய அமௌன்ட் தேவை. ஒரு லட்சம், இரண்டு லட்சம் தேவை என்றால் உடனடியாக என்ன செய்வோம் அடுத்தவர்களிடம் கடன் வாங்குவோம். சில பேர் 1000 ரூபாய் கூட கையில் இல்லாமல் கஷ்ட படுகிறார்கள். கடன் வாங்க கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். நிறைய பணத்தை சேமிக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். அதற்கு உண்டான வழிகளை பார்க்க வேண்டும். உங்களுடைய முயற்சிக்கு இந்த பரிகாரம் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து சமையலறைக்கு செல்லுங்கள். முகம் கை கால்களை கழுவிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். சுத்த பத்தமாக இல்லை என்றால் குளித்து விட வேண்டும். ஆண்களும் இதை செய்யலாம். பெண்களும் இதை செய்யலாம். சமையல் அறையில் இருக்கும் உப்பு ஜாடியை திறங்கள். இந்து உப்பு கொட்டி வைத்திருக்கும் உப்பு ஜாடிக்கு உள்ளே உங்களுடைய கையை வைக்க வேண்டும். உப்பை நீங்கள் தொட்டுக் கொண்டு பணக்கஷ்டம் தீர வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். சேமிக்க வேண்டும் என்று வேண்டுதலை வைத்துவிட்டு அதன் பின்பு, வழக்கம் போல குளித்துவிட்டு உங்களுடைய தினசரி வேலையை தொடங்குங்கள்.

தினமும் இதை செய்து வந்தாலே மகாலட்சுமி ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துவிடும். முயற்சி செய்து பாருங்கள். இந்த சின்ன பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு பல மடங்கு பலம் விரைவாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -