MS Dhoni : இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று மிலிட்டரி கேப் அணிந்து போட்டியில் விளையாகின்றனர் – காரணம் இதுதான்

Military-Cap
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கி ஆடி வருகின்றனர். இன்று இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிலிட்டரி கேப் அணிந்து விளையாடி வருகின்றனர் . இதோ வீடியோ

- Advertisement -

இந்த கேப்பினை இந்திய வீரர்களுக்கு சீனியர் வீரரான தோனி அளித்தார். தோனிக்கு இந்த கேப்பினை கேப்டன் கிங் கோலி அளித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் இந்த தொப்பியினை அணிந்து விளையாடுகின்றனர்.

இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி அவர்களின் குடும்பங்களுக்கு மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவினம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ பதவியில் இருப்பதால் தோனியின் கையால் மிலிட்டரி தொப்பி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -