இன்று மாலை 7 மணியை யாரும் தவற விடாதிங்க. ஏழேழு ஜென்ம ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, இந்த நேரம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திரும்பி வராது.

vetrilai
- Advertisement -

ஏழேழு ஜென்மம், 7, இந்த 7 என்ற எண்ணிற்கும் இன்றைய நாளிற்கும் என்ன சம்பந்தம். இன்றைக்கு காலை காலண்டரை கிழக்கு போது கவனித்தீர்களா. இன்று 7.7.2023. 7 7 7 என்ற நம்பர் வந்திருக்கிறது. 2023 ஐ கூட்டினால் கூட்டுத்தொகை 7. ஆக மொத்தம் 3 ஏழு சேர்ந்து வந்திருக்கக்கூடிய அற்புத சக்தி வாய்ந்த நாள் தான் இன்று. அதுமட்டுமில்லாமல் இன்றைய தினம் பஞ்சமி திதி. வாராகித் தாய்க்கு உகந்த திதியும் கூட. அது மட்டும் இல்லாமல் இன்றைய தினம் மகாலட்சுமிக்கு சொந்தமான வெள்ளிக்கிழமை. இந்த நாளை இந்த நேரத்தை நாம் தவறவிட்டால் நாம் துரதிஷ்ட சாலைகள் தானே.

ஏழேழு ஜென்மமாக எந்த ஆசை நிறைவேறாமல் அடுத்தடுத்த மனித ஜென்மத்தை எடுத்து வருகிறோமோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்ன இருக்கிறது. அதை நிறைவேற்றிக் கொள்ள இன்றைய தினம் மாலை 7 மணிக்கு பரிகாரத்தை எப்படி செய்வது என்று பதிவை படித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

நிறைவேறாத ஆசை நிறைவேற இன்று மாலை 7 மணிக்கு செய்ய வேண்டிய பரிகாரம்:
இன்று மாலை 7 மணியிலிருந்து 7.55 ஐந்துக்குள் இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். நீல நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நிறைவேறாத ஆசை எது. அதை இந்த வெற்றிலையில் எழுத வேண்டும். நிறைய ஆசைகளை எழுதக்கூடாது. ஏதாவது மூன்று ஆசைகள் தான். முதலிலேயே தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வாழ்க்கைக்கு முதல் மூன்று இடங்களில் எந்த குறிக்கோளை வைத்திருக்கிறீர்கள். அந்த மூன்று விஷயங்களை அந்த வெற்றிலையில் ஒவ்வொரு வரியில் எழுத வேண்டும். எனக்கு வாழ்க்கையில் மூன்று குறிக்கோள் இல்லை. ஒரே ஒரு குறிக்கோள் தான். பல வருடங்களாக அதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் அது நிறைவேறவே இல்லை. அந்த ஒரு விஷயத்தை முழு மனதோடு அந்த வெற்றிலையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு இத்தனை வருடத்திற்குள் சொந்த வீடு கட்ட வேண்டும். இத்தனை வருடத்திற்குள் கடனை திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.

- Advertisement -

சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும். தீராத நோய்நொடி தீர வேண்டும். சந்தோஷமாக வாழ வேண்டும். வாழ்க்கை துணையோடு சேர வேண்டும். குழந்தை வரம்வேண்டும். மாணவர்களாக இருந்தால் டாக்டராக வேண்டும் வக்கீலாக வேண்டும் என்று கூட எழுதலாம். உங்களுடைய பிள்ளை டாக்டராக வேண்டும் வக்கீல் ஆக வேண்டும் இன்ஜினியராக வேண்டும் என்று கூட எழுதலாம்.

இப்படி உங்களுக்கு என்ன தேவையோ அதை அந்த வெற்றிலையில் எழுதி விடுங்கள். எழுதிய வெற்றிலையை ஒரு நோட்டுப் புத்தகத்திற்கு நடுவே வைத்து மூடி விடுங்கள். அந்த நோட்டு புத்தகத்தை எடுத்து ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். கூடிய சீக்கிரத்தில் நீங்கள் அந்த வெற்றிலையில் எழுதியது நடக்கும். வெற்றிலையில் எழுதியது நடந்த பிறகு அந்த வெற்றிலையை எடுத்து தூக்கி தூர போட்டால் போதும். (வெற்றிலையில் நிறைவேறாத ஆசையை எழுதி விட்டு, அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறியது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.)

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் எப்போதும் உங்களுடன் துணை நிற்கும். இந்த கயிறை மட்டும் கையில் கட்டி பாருங்கள். வாழ்க்கையில் எதிர்பாராமல் வரும் ஆபத்துக்களில் இருந்தும் தப்பிக்க எளிமையான வழிபாடு.

இந்த பரிகாரத்திற்கு நம்பிக்கைதான் மூலதனம். 7ம் தேதி, 7ம் மாசம், வருடத்தில் கூட்டுத் தொகை 7, 7 மணி ஆகவே இவ்வளவு சக்தி வாய்ந்த பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்த இந்த நேரத்தை யாரும் தவற விடாதிங்க. குலதெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை செய்யுங்கள். பூஜையறையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெண்கள் இன்றைக்கு மாதவிலக்கு என்றாலும் பரவாயில்லை. பூஜை அறையை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். மனதில் தெய்வத்தை நினைத்துக் கொள்ள எதுவும் தடையாக இருக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -