பூஜை அறையில் தெய்வங்கள் உயிர் பெற பொட்டு வைக்கும் முறை

pooja-room
- Advertisement -

சில வீடுகளில் பூஜை அறையில் உள்ள தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு உயிர் இருக்கும். ஒரே ஒரு சின்ன அகல் விளக்கு தான் ஏற்றி வைத்திருப்பார்கள். பார்த்தாலே நாம் கண்டுபிடித்து விடலாம். பார்க்கும்போதே தெய்வக் கடாட்சம் அந்த பூஜை அறையில் தாண்டவம் ஆடும். சில வீடுகளில் ரொம்ப பெரிய பூஜை அறை இருக்கும். மின்விளக்குகளால் பெரிய அலங்காரம் இருக்கும். ஆனால் அந்த பூஜையறையில் இருக்கும் தெய்வங்களின் திரு உருவப்படத்துக்கு உயிர் இருக்காது.

கலை இழந்து காணப்படும். பூஜை செய்தும் மன நிம்மதி இருக்காது. இப்படிப்பட்ட பிரச்சனை உங்கள் வீட்டில் இருந்தால் பூஜை அறையில் இருக்கும் அந்த தெய்வங்களுக்கு உயிர் கொடுப்பது எப்படி. உங்கள் வீட்டு பூஜை அறையிலும் இறைவன் வந்து வாசம் செய்ய என்ன பரிகாரம் செய்யலாம். எளிமையான முறையில் ஆன்மீகத்தில் ஒரு வழி சொல்லப்பட்டுள்ளது. அது என்ன வழி என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கும் முறை

இதை தெய்வ வசியம் என்று சொல்லலாம். இந்த பொட்டை தெய்வங்களுக்கு வைத்தால் தெய்வம் உங்களுக்கு வசமாகி, வசியமாகி உங்கள் வீடு தேடி வந்து, உங்கள் பூஜை அறையில் குடிகொள்ளும். இந்த திலகத்தின் வாசத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. வெறும் மூன்றே பொருட்கள்தான். நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும்.

சந்தனம், அரகஜா, புனுகு. இந்த மூன்று பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். சந்தனம் ஒரு ஸ்பூன் என்றால், அரகஜா 2 சிட்டிகை, புனுகு 1 சிட்டிகை போட்டு கொஞ்சமாக பன்னீர் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி, கலந்தாலே அந்த சந்தனம் அப்படியே மணக்கும்.

- Advertisement -

அந்த வாசத்தால் நாமே மயங்கி விடுவோம். பிறகு இறைவன் வசியமாக மாட்டாரா. இந்த மூன்று பொருட்களையும் கலந்து சுவாமி படங்களுக்கு பொட்டு வைத்து அதன் மேலே குங்குமப்பொட்டு வைக்கவும். இதை செய்தால் நல்ல ஒரு இறை வசிய தன்மை பூஜை அறையில் ஏற்படும். உயிரற்று இருக்கும் தெய்வத்தின் திருவுருவப்படங்கள் எல்லாம் உயிர் பெறும்.

இதே போல இந்த சந்தனத்தை நிலைவாசல் படியிலும் பூசி அந்த இடத்திலும் குங்கும போட்டு வைக்கலாம். நிலை வாசல் கதவிலும் பூசி அந்த இடத்திலும் பொட்டு வைக்கலாம். இந்த வாசம் வீடு முழுவதும் நிறைந்திருந்தால் இறை சக்தி உங்கள் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: உங்க ராசிப்படி நீங்க எந்த முருகர் கோவிலுக்கு போனா அதிர்ஷ்டம் அடிக்கும் தெரியுமா?

நீங்கள் வேண்டுமென்றால் பூஜை அறையை ஒரு முறை சுத்தம் செய்துவிட்டு பிறகு இந்த சந்தனத்தை வைத்து, குங்குமம் பொட்டை வைத்து வழிபாடு செய்து பாருங்களேன். உங்களுக்கே புரியும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த முறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -