இந்த அற்புத இலை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் இறைவனையும் வசியம் செய்து விடலாம்

marudhani
- Advertisement -

ஆசை இல்லாத மனிதன் என்று எவரும் இல்லை. யாரிடம் எது இல்லையோ அதன் மீதுதான் ஆசை ஏற்படும். அவ்வாறு ஒரு சிலருக்கு பணம், நகை, பதவி, புகழ், வியாபாரம் இது போன்ற விஷயங்கள் தனக்கு எளிதாக கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இவ்வாறான நமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவித பரிகாரங்களையும், பூஜைகளையும் செய்வது, அல்லது கோவிலுக்குச் சென்று இறைவனை வேண்டிக் கொள்வது இவைதான் வசியம் எனப்படும். அவ்வாறு ஆசைப்பட்ட விஷயத்தை அடைவதற்காக செய்யக்கூடிய பரிகாரம் மற்றும் பூஜை தான் வசியம் எனப்படுகிறது. இவ்வாறு நமது ஆசை நிறைவேற பல பூஜைகள் செய்து இறைவனின் அருளை வேண்டுகின்றோம். ஆனால் அருள் புரிகின்ற இறைவனையே வசியம் செய்து விட்டால் நமக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் தானாகவே கிடைத்து விடும். அவ்வாறு இறைவனையே வசியம் செய்யும் ஒரு அற்புத இலைதான் மருதாணி இலை. இதனை எவ்வாறு பயன்படுத்தினால் இறைவனை வசியம் செய்யமுடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

பொதுவாகவே வசியம் என்ற வார்த்தை இன்றைய சமுதாயத்தில் ஒரு கெடுதல் மிகுந்த வார்த்தையாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் வசியம் என்பது நாம் ஆசைப்பட்ட விஷயத்தையோ அல்லது ஒரு நபரையோ நம்மை நோக்கி வரவழைப்பதாகும். அதாவது அவரின் பார்வை நம் மீது படுவதாகும். இதனை பலரும் தவறான முறையில் பின்பற்றி வருவதால் வசியம் என்ற வார்த்தை கெடுதலாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அவ்வாறு மருதாணி இலையை வைத்து இறைவனின் பார்வையை நேரடியாக நம் மீது விழ வைக்க முடியும். இவ்வாறு இறைவனின் அருள் நமக்குக் கிடைத்து விட்டால் நமது வாழ்விற்குத் தேவையான அனைத்து வளங்களும் நம்மைத் தேடி வரும். இவ்வாறான அற்புதத்தை நமக்கு தரக்கூடியதுதான் மருதாணி இலை.

marudhani

மருதாணி இலைகளை பறித்து கொண்டு அவற்றை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை வரட்டி தட்டுவது போல் சின்ன சின்னதாக தட்டிக்கொண்டு வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.

- Advertisement -

இவை நன்றாக காய்ந்தவுடன் இவற்றை மறுபடியும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தூளாக்கி சல்லடை வைத்து சலித்து கொள்ளவேண்டும். சலித்து வைத்துள்ள அந்த பவுடருடன் சுத்தமான நெய் மற்றும் இரண்டு, மூன்று சொட்டு அக்தர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

marudhani

பின்னர் கோவிலுக்கு செல்லும் பொழுதும், ஏதேனும் பூஜைகளுக்கு செல்லும் பொழுதும் அல்லது வீட்டில் பூஜை செய்யும் பொழுதும் இந்த மையை லேசாகத் தொட்டு நெற்றியில் வைத்துக் கொண்டு அதன் பிறகு தான் அவற்றை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த மருதாணியின் மகிமையால் இறைவனின் அருள் நம்மை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இவ்வாறு இறைவனின் அருள் கிடைத்து விட்டால் நமக்கு தேவையான அனைத்து வரங்களும் கிடைத்துவிடும்.

mai

அவ்வாறு பெரியவர்களை சந்திக்கச் செல்லும் பொழுதும் கூட இந்த மையை நெற்றியில் வைத்துக் கொண்டு செல்லலாம். ஒரு சிலருக்கு இந்த மையை நெற்றியில் வைப்பது சற்று அசௌகரியமாக இருந்தது என்றால் புருவத்தில் இருக்கும் முடியின் மீதோ அல்லது நெற்றியின்மேல் தலையில் இருக்கும் முடியிலோ லேசாக தடவிக் கொள்ளலாம்.

- Advertisement -