இரவு தூங்கும் போது மட்டும் இந்த பொருள்களை தலையனை அடியில் வைத்தால், இந்த உலகத்தையே ஆளும் பேராற்றலையும் செல்வ வளத்தையும் பெறலாம்.

sleeping man sulam coin
- Advertisement -

பொதுவாக நமக்கு நல்லது நடக்க காலையில் கண்விழித்ததும் இதையெல்லாம் பார்க்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே நமக்கு சாஸ்திரங்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் இரவு உறங்கும் போது ஒரு சில பொருட்களை நாம் தலையணை அடியில் வைத்து உறங்கும் போது நம் வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற தகவலை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இந்த கண் திருஷ்டி போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு உறங்கும் போது இதை தலையணை அடியில் வைத்து உறங்கி விடுங்கள். மறு நாள் காலை அந்த எலுமிச்சை பழத்தை பத்திரமாக எடுத்து வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். மூன்று நாட்கள் இதை வைத்த பிறகு அடுத்து வரும் செவ்வாய் அல்லது ஞாயிறு கிழமைகளில் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் அம்மன் கோவில் ஆலயத்தில் உள்ள சூலத்தில் இந்த எலுமிச்சை பழத்தை சொருகி வைத்து விடுங்கள். எப்பேர்பட்ட கண் திருஷ்டியும் தூள் தூளாகி விடும். இதனால் உங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்காது.

- Advertisement -

அடுத்தது காரிய தடை நீங்கள் எந்த செயலை தொடங்கினாலும் அதில் தடையாகவே வந்து கொண்டிருந்தாலும், உங்களுடைய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் எடுத்த காரியம் தடைபட்டுக் கொண்டிருந்தால் ஒரு மஞ்சள் நிற துண்டு அல்லது சிகப்பு நிறத் துண்டு இரண்டில் ஏதாவது ஒன்றில் ஒரு கைப்பிடி நிறைய கல் உப்பை சேர்த்து மூட்டையாக கட்டி அதே போல் தலையணை அடியில் வைத்து உறங்கி விடுங்கள். ஏழு நாட்கள் தொடர்ந்து இதை வைத்த பிறகு ஏழாவது நாள் இதை தண்ணீரில் கரைத்து விட வேண்டும். இதனால் நீங்கள் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்.

அடுத்து சமூகத்தில் நல்ல அந்தஸ்துடனும் பேர் புகழுடனும் வாழ, சொந்தங்கள் கிடையே நல்ல மதிப்புடன் இருக்க, அனைவரும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க, கௌரவமாக வாழ, நினைத்த பொருளை வசிகரிக்க, கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட, சுத்தமான சந்தனத்தை இரவு படுக்கும் முன்பு தலையணை அடியில் வைத்துக் கொண்டு உறங்கி விடுங்கள். இது எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து கொண்டு உறங்கலாம். அதன் பிறகு எந்த சந்தனத்தை நாம் பயன்படுத்தியும் கொள்ளலாம்.

- Advertisement -

அதே போல் புனகு அல்லது அரகஜா இரண்டில் ஏதேனும் ஒன்று இரவு படுக்கும் பொழுது தலையணை அடியில் வைத்து படுக்கும் பொழுது உங்களுக்குள் தெய்வீக ஆற்றல் அதிகரிப்பதுடன், உங்கள் வாக்கு எண்ணங்கள் தூய்மை அடைந்து மேம்படும். இதையும் மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது இந்த பொருட்களை நாம் பயன்படுத்தியும் கொள்ளலாம்.

பண ஈர்ப்பு சக்தி அதிகரித்து நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்க, இரவு உறங்கும் ஒரு சிறிய வெள்ளி நாணயத்தை தலையணை அடியில் வைத்து உறங்கி விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் இந்த வெள்ளி காயினை நீங்கள் பார்க்க வேண்டும். இதை ஒரு மாதம் வரை தொடர்ந்து செய்யும் பொழுது உங்களுக்கான பண வரவை கண்டு நீங்களே அதிசயிருப்பீர்கள். இந்த வெள்ளி காயினை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து மறுபடியும் வேறு வெள்ளி காயினை மாற்றி வைத்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு செயலும் செய்வதற்கு நம்முடைய முயற்சி உழைப்பு அனைத்தும் மிக மிக முக்கியமானது இதில் எந்தவித மறுப்பும் கிடையாது. இவையெல்லாம் செய்யும் பொழுது வரும் தடைகள், திருஷ்டி, பொருள் நம்மை வந்து சேர்வதற்கான ஈர்ப்பு இதற்கெல்லாம் ஆன்மீகம் சில தாந்திரீகங்களை நமக்கு சொல்லித் தந்திருக்கிறது அவற்றின் உதவியுடன் நாம் செயல்படும் போது கூடிய விரைவில் நாம் நினைத்த காரியத்தை சாதிக்கலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -