சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, நுரையீரல் சளி எல்லா வகையான பிரச்சனைக்கும் 1 மணி நேரத்தில் தீர்வு. வெற்றிலையோடு இந்த பொருளை மட்டும் சேர்த்து சாப்பிட்டாலே போதும்.

cough
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய நுரையீரலை பாதித்து விடும். நுரையீரலில் அதிகப்படியான சளி சேர்வதன் மூலம் நமக்கு ஆரோக்கியா ரீதியாக அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும். நமக்குப் புரியும்படி சொல்லப்போனால் சிலருக்கு நெஞ்சு சளி பிடித்திருக்கிறது என்று சொல்லுவார்கள். இவர்களுக்கு எவ்வளவு மருந்து வாங்கி கொடுத்தாலும், மருந்தை சாப்பிடும்போது, அந்த இருமல் போய்விடும். மருந்தை நிப்பாட்டிய உடன் இருமலும் சளியும் மீண்டும் வந்து தொற்றிக் கொள்ளும்.

vetrilai

இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தர தான், இந்த சுலபமான குறிப்பு. அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சொல்லப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். வெற்றிலை 2, கிராம்பு 1, ஏலக்காய் 1, மிளகு 5, இதனுடன் இனிப்பு சுவையை சேர்க்க சிறிய துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை –  1/2 ஸ்பூன்.

- Advertisement -

முதலில் இரண்டு வெற்றிலைகளிலும் காம்புப் பகுதியையும், நுனி பகுதியையும் நீக்கிவிட வேண்டும். கிராம்பு, ஏலக்காய், மிளகு, வெல்லம், இந்த நான்கு பொருட்களை வெற்றிலைக்குள் வைத்து சுருட்டி மடித்து வாய்க்குள் போட்டுக் கொள்ள வேண்டும். நன்றாக மென்று அதன் சாறை விழுங்கி மீதமிருக்கும் தம்பியை வெளியே துப்பி விடலாம்.

krambu

காலை, மாலை இரண்டு வேளையும் இப்படி வெற்றிலையை தயார் செய்து சாப்பிடலாம். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். 17 வயதுக்கு கீழே உள்ளவர்கள் ஆக இருந்தால் ஒரு வெற்றிலையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வெற்றிலையை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைத்துவிடும். உங்கள் உடலில் இருக்கும் சளி மலம் மூலமாக வெளியேற்றப்படும்.

- Advertisement -

சளி பிரச்சனை மட்டுமல்ல, நம் உடலில் இருக்கக்கூடிய செரிமானத்தை சீர்படுத்த, குடலை சுத்தப்படுத்த, வாய்வுத்தொல்லை நீங்க, சைனஸ் சரியாக, நுரையீரலை சுத்தம் செய்ய, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும்.

Milagu benefits in Tamil

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக, தொப்பை இல்லாமல், செரிமான பிரச்சனை இல்லாமல் வாழ்ந்ததற்கு வெற்றிலை பாக்கு போட்டதும் ஒரு காரணமாக இருந்தது. வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நாளடைவில் மறைந்து போனதும் நம் ஆரோக்கியம் கெட ஒரு காரணம் தான். சிறிய குழந்தைகள் இதை வாயில் போட்டு மென்று சாறை முழுங்க வில்லை என்றால், மேல் சொன்ன பொருட்களை எல்லாம் ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, இதை வடிகட்டி அதில் இருக்கும் சாறை மட்டும் குடித்தால் கூட நல்ல பலனை பெற முடியும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -