இரும்புக் கல்லில் கூட, நான்ஸ்டிக் தவாவில் தோசை சுடுவது போல மொறுமொறு தோசை சுட முடியும். இந்த டிப்ஸை பின்பற்றினால்!

dosa-kal1
- Advertisement -

இப்போதெல்லாம் நிறைய பேர் வீடுகளில், இரும்பு தோசைக்கல்லை பராமரிக்க முடியாததால், நான்ஸ்டிக் கல்லை வாங்கி பயன் படுத்துகிறார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு, இரும்பு தோசை கல்லில், தோசை வார்ப்பது தான் மிகவும் சிறந்தது. சரி, இந்த தோசை கல்லை எப்படி பராமரிப்பது? புதியதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால், அதை ஒரே நாளில் துரு நீக்கி, சுத்தம் செய்வது எப்படி? உங்கள் வீட்டில் பழைய தோசைக்கல் அதிகமாக துருப்பிடித்து, கருப்பு பிடித்திருந்தால், அதை சுத்தம் செய்வது எப்படி? என்பதற்கான சுலபமான வழிமுறைகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dosaikal

முதலில் கருப்பு பிடித்த தோசைக்கல்லை, சீக்கிரமா க்ளீன் செய்வது எப்படி என்ற சூப்பர் டிப்ஸ பாக்க போறோம்! ஸ்டவ், ஆன் பண்ணி, ஃபுல் ஃபிலேம், தீ வைக்க வேண்டும். துருப்பிடித்த அந்தக் கல்லை, எடுத்து அடுப்பின் மீது வைத்து நன்றாகக் காயவிடுங்கள். அதிலிருந்து அப்படியே புகை கிளம்பும், அந்த அளவிற்கு காய வைக்க வேண்டும். உஷாராக செய்யுங்கள். கையை சுட்டு கொள்ளாதீர்கள். இடுக்கியோ, பிடி துணியோ, கட்டாயம் கையில் இருக்க வேண்டும்.

- Advertisement -

நம் வீடுகளில் மண் அகல் விளக்கு கட்டாயம் இருக்கும் அல்லவா? அந்த மண் அகல் விளக்கில், அடிப்பக்கத்தில் சில விளக்குகள் கூராக இருக்கும். அதை பயன் படுத்தினால் பரவாயில்லை. உங்கள் வீட்டில், அடி கூர் இல்லாத அகல்விளக்கு தான் இருக்கிறது என்றால், அதுவும் பரவாயில்லை. அதை உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, சூடான தோசைக் கல்லில், கரி இருக்கும் இடத்தில் எல்லாம், தேய்க்க வேண்டும். கட்டாயம் கல், சூட்டோடு இருக்கும் போதுதான் இப்படி தேய்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த கரியும் துருவும், தூள் தூளாக பேத்துக் கொண்டு வந்துவிடும்.

dosakal

இறுதியாக, ஒரு ஸ்டீல் ஸ்க்ரப்பர் நாரை போட்டு, பாத்திரம் தேய்க்கும் சபீனா பவுடரை போட்டு, நன்றாக தேய்த்து, சுத்தப்படுத்தி விடுங்கள். இப்போது தோசைக்கல் நன்றாக சுத்தமாக இருக்கும். அப்படியே தோசை ஊற்றினால் கட்டாயம், தோசை வராது. ஒட்டிக்கொள்ள தான் செய்யும். இந்த தோசைக்கல்லை இப்போது எப்படி பதப்படுத்த வேண்டும்.

- Advertisement -

தோசைக் கல்லின் மேல் பக்கத்தில், ஒரு ஸ்பூன் கல்லுப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மூன்றையும் ஒன்றாக போட்டு கலக்கி, தோசை கல்லின் மேல் பக்கம் முழுவதிலும், தடவி ஊற வைத்து விடுங்கள். இது 24 மணி நேரம் வரை ஊரலாம். எந்த ஒரு தவறும் கிடையாது. அதன் பின்பு, அந்தக் கல்லை நன்றாக கழுவிவிட்டு, தோசை சுடுவதற்கு பயன்படுத்தலாம்.

dosa-kal

ஒரு சிறிய காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் கல்உப்பை வைத்து முடிச்சுப் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். தோசைக்கல்லை, அடுப்பில் வைத்து விட்டு நன்றாக சூடு ஆன பின்பு, ஒரு சொட்டு, தோசைக்கல்லில் எண்ணெயை ஊற்றி, கல் உப்பு மூட்டையை தோசைக்கல்லில் நன்றாக தேய்த்து விட்டு, பின்பு தோசையை ஊற்றி பாருங்கள்! நான் ஸ்டிக் தவா தோற்றுப் போய்விடும் கண்டிப்பாக!

- Advertisement -

அடுத்ததாக புதியதாக நீங்கள் தோசைக்கல் வாங்கினீர்கள் என்றால், அதில் தோசை சுடுவது மிக மிக கஷ்டமான ஒரு விஷயம் தான். ஆனால் அந்த தோசைக்கல்லை சபீனா பவுடர் போட்டு, ஐந்திலிருந்து ஆறு முறை ஸ்க்ரப்பர் நாரை வைத்து தேய்த்து கழுவி விட வேண்டும். அதன்பின்பு, அந்த தோசை கல்லையும் மஞ்சள் உப்பு நல்லெண்ணெய் சேர்த்த கலவையோடு சேர்த்து 24 மணிநேரம் ஊற வைத்த பின்பு, மீண்டும் நன்றாக கழுவி, மீண்டும் சபீனா பவுடர் போட்டு மீண்டும், நாரை வைத்து தேய்த்து அதில் இருந்து, கருப்பு நிறம் வராத அளவிற்கு கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.

dosai

உங்கள் கைகளால் அந்த தோசைக்கல்லை தொட்டால், துரு நிறமும், கருப்பு நிறம் உங்கள் கையில் ஒட்டக் கூடாது. அந்த அளவிற்கு முதல்முறை சுத்தம் செய்து, அந்த தோசைக்கல்லை, அடுப்பில் வைத்து, முதலில் நன்றாக சூடு செய்து விட்டு, அதன் பின்பும் வெங்காயத்தை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பின்பு உருளைக் கிழங்கை வைத்து, நன்றாக தேய்க்க வேண்டும். இறுதியாக ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கல் உப்பு மூட்டையை வைத்து நன்றாகத் தேய்த்துவிட்டு, தோசை ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று கல்லில் ஒட்டாமல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
இன்னைக்கு நைட், கோதுமை அடை தோசையை இப்படி சுட்டு பாருங்க! 10 நிமிஷத்துல டின்னர் ரெடி!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -