உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்யம் தாண்டவமாட ஒரு கட்டி பெருங்காயம் போதும்.

perungayam
- Advertisement -

வாயு தொல்லையில் இருந்து நம்மை விடுபட வைக்கும் ஒரு சின்ன கட்டி பெருங்காயம், நம்மை பணப்பிரச்சனையில் இருந்தும் வெளிவர வைக்கும். தாந்திரீக பரிகாரங்களில் இந்த பெருங்காயக்கட்டிக்கு ஒரு தனி மகத்துவம் இருக்கிறது. வீட்டில் பலவிதமான பணப் பிரச்சனைகள் இருக்கிறது என்பவர்கள், பின் சொல்லக்கூடிய இந்த கட்டி பெருங்காய தாந்திரீக பரிகாரத்தை செய்து பாருங்கள்.

நிச்சயம் உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் சீக்கிரம் சரியாகிவிடும். அந்த பணக்கஷ்டத்திலிருந்து சீக்கிரம் விடுபட்டு விடுவீர்கள். வாங்க ஆன்மீகம் சொல்லும் அந்த தாந்திரீக பரிகாரம் என்ன என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பணக்கஷ்டம் தீர்க்கும் பெருங்காய தாந்திரீகம்

இந்த பரிகாரம் செய்ய நமக்கு கட்டிப் பெருங்காயம் தான் தேவை. தூள் பெருங்காயத்தில் செய்யக்கூடாது. தரமான வாசம் நிறைந்த கட்டி பெருங்காயத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று சதுர வடிவில் ஒரு சின்னதாக மஞ்சள் துணி எடுத்துக்கோங்க. அதில் சின்ன கட்டி பெருங்காயம் வைத்து முடிச்சு போட்டு கட்டிக்கொள்ளுங்கள்.

பூஜையறையில் வைத்துவிட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தையும் குரு பகவானையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பண கஷ்டம் தீர வேண்டும் என்று ஆழ்மனதில் நம்பிக்கையோடு சொல்லுங்கள். பிறகு இந்த முடிச்சை எடுத்து உங்களுடைய பர்ஸில் வச்சுக்கோங்க. சின்ன முடிச்சு தான்.

- Advertisement -

பெருங்காய கட்டி சின்ன துண்டாக இருக்கும் அல்லவா. அந்த துண்டை முடிச்சு போட மஞ்சள் துணியை எடுத்துக் கொண்டால் போதும். பர்ஸில் இந்த முடிச்சை வைக்கலாம். இன்னொன்று முடிச்சு தயார் செய்து பணம் வைக்கும் பீரோவிலும் வைக்கலாம். இந்த கட்டிப் பெருங்காயத்தின் வாசம் உங்களுக்கு பண ஈர்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

இந்த பெருங்காயத்தை பர்ஸில் வைத்து அதில் பத்து ரூபாய் நோட்டு எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். காலியான பசியில் இந்த பெருங்காயத்தை வைக்கக் கூடாது. அடுத்தபடியாக தினமும் வியாழக்கிழமை என்றால் குளித்து முடித்துவிட்டு வந்து உடனேயே ஒரு சின்ன கட்டி பெருங்காயத்தை எடுத்து கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கல்லில் உரசி, அந்த திலகத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிசுபிசுப்பு தன்மையோடு இருக்கும். நீங்கள் பெண்களாக இருந்தால் நெற்றியில் பொட்டு வைத்த பிறகு லேசாக யார் கண்ணுக்கும் தெரியாமல் இந்த திலகத்தை இட்டுக் கொள்ளலாம். அந்த திலகத்துக்கு மேலே குங்குமம் வைத்தாலும் தவறு கிடையாது. அதை நீங்கள் நெற்றியில் வைத்திருக்கிறீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

நெற்றியில் வைக்க விருப்பமில்லை நெற்றியில் வைக்க முடியாதவர்கள் இதை லேசாக உச்சந்தலையில் கொஞ்சமாக தடவிக் கொள்ளுங்கள். இதனால் சருமத்திற்கோ தலைமுடிக்கோ எந்த பாதிப்பும் வராது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தினமும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது.

சரி தினமும் எங்களால் இதை நெற்றியில் வைக்க முடியவில்லை என்பவர்கள் வியாழக்கிழமை மட்டுமாவது இந்த பெருங்காய திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமையும் எங்களால் வைக்க முடியாது என்பவர்கள் கட்டாயம் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்களில் மட்டுமாவது இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வர உங்கள் பண கஷ்டத்திற்கு நிச்சயம் விமோசனம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வீடு எந்நேரமும் வற்றாத பணவரவுடன் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இதை வைத்தால் போதும்.

எளிமையான தாந்திரீக பரிகாரம் நல்ல பவரான தாந்திரீக பரிகாரம் இது. செய்த ஒரு சில நாட்களிலேயே பலனை கண்கூடாக காணலாம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -