வீடு எந்நேரமும் வற்றாத பணவரவுடன் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இதை வைத்தால் போதும்.

kuberar cash
- Advertisement -

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும்யெனில் பணத்திற்கு அதிபதியான தெய்வங்களின் அனுகூலம் தேவை. இந்த அருள் இருந்தால் தான் பணவரவு ஏற்பட்டு பணம் பெருகும். அப்படியான அனுகூலத்தை பெற நம் செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை செய்வதாக இருந்தால் காலையில் குரு ஹோரையில் செய்ய வேண்டும் அல்லது மாலை 5 மணிக்கு மேல் குபேர ஹோரையில் செய்யலாம். இதையே வெள்ளிக்கிழமை செய்வதாக இருந்தால் சுக்கிர ஹோரையில் செய்யுங்கள். இந்த ஹோரை நேரத்தை காலண்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு சிகப்பு நிறத்திலான ஒரு துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ரூபாய்களிலே இப்போது அதிக மதிப்பு கொண்டது 500 ரூபாய். ஆகையால் 500 ரூபாய் தாள் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும் நேரம் மேற்சொன்ன ஹேரைகளில் ஏதாவது ஒரு நேரமாக தான் இருக்க வேண்டும்.

தீபம் ஏற்றிய பிறகு அந்த சிகப்பு நிற துணியில் 500 ரூபாய் தாளை வைத்து சிகப்பு நிற நூலால் கட்டி விடுங்கள். அதன் மேல் சிறிது மஞ்சள் வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு இதை மகாலட்சுமி தாயார், குபேரர், பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று 5 நிமிடம் அங்கேயே அமர்ந்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த முடிச்சை உங்கள் வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்கலாம் அல்லது ஒரு பாக்ஸில் கூட போட்டு மூடி வைக்கலாம் . இதை வைப்பதற்கு முன்பாக அந்த இடத்தில் சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றை காட்ட வேண்டும். அதன் பிறகு இந்த முடிச்சை அங்கேயே வைத்து விடுங்கள். இது 48 நாட்கள் வரை அப்படியே இருக்கலாம்.

48 நாட்கள் கழித்து இந்த பணத்தை எடுத்து நீங்கள் வேறு ஏதேனும் நல்ல காரியத்திற்கு செலவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு மீண்டும் இதே போல ஒரு முடிச்சு தயார் செய்து மீண்டும் தென்கிழக்கு மூலையிலே வைத்து விடுங்கள். பண வரவிற்கு இந்த பரிகாரம் நல்ல பலனை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானை இந்த முறையில் பூஜை செய்தால் வீட்டில் தங்கம் சேரும்.

இந்த பரிகாரம் செய்ய தேர்ந்தெடுக்கும் நேரமும் காலமும் மிகவும் முக்கியம். சுக்கிர பகவான், மகாலட்சுமி தாயார், குபேரர் என செல்வத்திற்கு அதிபதியான அத்தனை பேரையும் துணை கொண்டு செய்வதால் இந்த பரிகாரம் பணவரவை அதிகரித்துக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -