உங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியவரே, மீண்டும் வந்து உங்கள் கையில் பணத்தைக் கொடுத்து விடுவார். இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்து பாருங்கள்.

kadan1
- Advertisement -

நம்மில் நிறைய பேர் சூழ்நிலை காரணமாக யாருக்காவது ஒருவருக்கு பணத்தை கொடுத்து ஏமாந்து இருப்போம். சில பேர் பணத்தை கொடுத்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஏமாந்து நிற்பார்கள். இப்படி உங்களுடைய பொன் பொருள் சொத்து எதை நீங்கள் இழந்து இருந்தாலும், இந்த ஒரு சிறிய பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்கள் இழந்த பொருளை திரும்பவும் மீட்டெடுப்பதற்கு இந்த தாந்த்ரீக பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பொதுவாகவே பரிகாரம் செய்வதற்கு பிரம்ம முகூர்த்த நேரம் மிகவும் உகந்த நேரம். முடிந்தால் சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த பரிகாரத்தை செய்யலாம். பூஜை அறையில் அமர்ந்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு பூஜையறையில் நீங்களும் சுவாமியைப் பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வெற்றியைத் தரக்கூடிய ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளவேண்டும். சிறிது மஞ்சளை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளை தீப்பெட்டி குச்சியால் தொட்டு அந்த வெற்றிலையில் யார் உங்களுக்கு கடனை திருப்பித் தர வேண்டுமோ, யாரிடம் நீங்கள் ஏமார்ந்து இருக்கிறீர்களோ, அந்த நபரின் பெயரை எழுதி அவர் சீக்கிரமே குறிப்பிட்ட அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எழுதி விடுங்கள்.

உதாரணத்திற்கு ‘ரமேஷ் 50,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்’ இப்படி ஒரே வரியில் அந்த வெற்றிலையில் எழுதிவிட வேண்டும். எழுதிய அந்த வெற்றிலையை பூஜை அறையில் விளக்குக்கு முன்பு வைத்துவிட்டு கண்களை மூடி குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட நபர் மனம் திருந்தி எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும் அல்லது எனக்கு கொடுக்க வேண்டிய நகையை கொடுக்க வேண்டும். எனக்கு சேர வேண்டிய சொத்தை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் இப்படி வெற்றிலையில் எழுதிய விஷயத்தை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பூஜை நிறைவு ஆன பின்பு ஒரு நாள் இரவு மட்டும் வெற்றிலை பூஜை அறையிலேயே அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை இந்த வெற்றிலையை எடுத்து சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி அப்படியே ஓடும் தண்ணீரில் விட்டு விடலாம். ஏதாவது ஒரு கிணற்றில் கூட போடலாம். ஏரிகளில் போடலாம். குளங்களில் போடலாம். எந்த நீர்நிலைகளிலும் இல்லை என்பவர்கள் இதை கால் படாத இடத்தில் போடவேண்டும். கட்டாயமாக சாக்கடைக்குள், கழிவுநீர் போகக்கூடிய இடங்களில் இந்த வெற்றிலையை போடக்கூடாது.

இந்த பரிகாரத்தை செய்து விட்டு நீங்கள் இழந்ததை மீண்டும் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை செய்து வாருங்கள். உங்கள் பணம் உங்கள் கையை தேடிவரும். நம்பிக்கையாக செய்தவர்களுக்கு இந்த பரிகாரத்தின் மூலம் நிச்சயம் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -