இழந்த பணம், சொத்துக்கள், பெயர், புகழ் அனைத்தையும் திரும்ப பெற இந்த அம்மனுக்கு எந்த தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா?

- Advertisement -

நல்ல செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள் கூட திடீரென தன் செல்வங்களை எல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பது உண்டு. இன்று ஏழையாக இருக்கும் ஒருவர், நாளை பணக்காரனாகவும் செய்கிறார். இப்படி நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் நம்முடைய இழந்த பெயர், புகழ், சொத்து, பணம், செல்வங்கள், கௌரவம் என்ற அனைத்தையும் திரும்பப் பெறுவதற்கு இந்த சக்தி வாய்ந்த தீபத்தை இந்த அம்மனுக்கு ஏற்றி வழிபட்டால் போதும் என்கிறது ஆன்மீகம். அத்தகைய சக்தி வாய்ந்த வழிபாடு பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அம்மன் பல ரூபங்களில் இருந்தாலும், சில ரூபங்கள் சாந்தமாகவும், சில ரூபங்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் காட்சியளிக்கின்றன. கயவர்களையும், அசுரர்களையும் அழிப்பதற்கு அவதாரமெடுத்த இத்தகைய ஆக்ரோஷமான உருவம் கொண்ட அம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவர்களிடம் நாம் வைக்கும் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும். அதற்குரிய நியாயமான பிரார்த்தனைகளும், பரிகாரங்களும் செய்வது மிகவும் முக்கியம்.

- Advertisement -

அந்த வகையில் நாம் இழந்த செல்வாக்கு திரும்ப கிடைக்க வராகி அம்மனுக்கு இந்த சக்தி வாய்ந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபடலாம். ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த இந்த வராகி அம்மன் அதீத சக்தி படைத்தவராக பக்தர்களுக்கு காட்சி புரிகின்றார். இழந்த செல்வங்களை மட்டுமல்லாமல் குழந்தை வரம் அருளுவதிலும் கருணை உள்ளம் கொண்டவளாக திகழ்கின்றாள்.

பொதுவாக வராக அவதாரம் எடுத்திருக்கும் இந்த அம்மனை வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகள் உடனடியாகத் தீரும் என்கிற நம்பிக்கை உண்டு. மேலும் வராகி வழிபாடு செய்வதால் திருமணத்தில் இருக்கும் தடைகளும் எளிதாக அகலும். சத்ருக்களை அழிக்க அவதாரம் எடுத்த இந்த வராகி அம்மனுக்கு மாதுளம் பழம் வைத்து வழிபடுவது சிறப்பு.

- Advertisement -

தோல்வி, அவமானம், எதிர்ப்புகள் ஆகியவற்றை சமாளிக்கும் மன வலிமையை அதிகரிக்க வராஹி அம்மனை மனதார வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். முடியவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் காரியத்தை கூட உடனே முடித்துக் காட்டும் வல்லமை படைத்தவள் வராஹி அம்மன் ஆவார். இந்த வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமையில் சுத்தமான மண் அகல் விளக்கு ஒன்றை எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு கரு நீல துணியை கட்டமாக வெட்டி அதில் கொஞ்சம் வெண்கடுகு சேர்த்து எள் தீபம் ஏற்றுவது போல முடிந்து கொள்ள வேண்டும். காலையில் ஆறு மணியிலிருந்து 7 மணி வரையிலான காலகட்டத்தில் அல்லது இரவு எட்டு மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும்.

வராஹி அம்மன் சன்னிதிக்கு சென்று மண் அகல் விளக்கில் இந்த கரு நீல துணியில் இருக்கும் வெண்கடுகு திரியை போட்டு தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால் இழந்த அத்தனையும் நமக்கு சீக்கிரமாகவே திரும்ப கிடைக்கும். மேலும் நம் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அது நியாயமானதாக இருந்தால் நிச்சயம் இந்த வராகி அம்மன் அதனை நிறைவேற்றி கொடுப்பார். எட்டு சனிக் கிழமைகளில் இவ்வாறு செய்து வர நிச்சயம் உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீரும். தீராத பிரச்சனை, தீராத துன்பம், நிறைவேறாத ஆசைகள் அத்தனையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்த இந்த வராஹி அம்மனை இப்படி வழிபட்டு பயன் பெறலாமே!

- Advertisement -