தெருக்கோடியில் இருப்பவர்களை கூட, பல கோடிக்கு அதிபதியாக்கும் ஜாதிக்காய்.

cash-jathikkai
- Advertisement -

அதிர்ஷ்ட காற்று வீசினால் மட்டும்தான் தெருக்கோடியில் இருப்பவர் கூட பல கோடிக்கு அதிபதி ஆக முடியும். முன்பக்கம் வந்த அதிர்ஷ்டம், சொல்லாமல் கொள்ளாமல் பின்பக்கம் சென்று விட்டால், பல கோடிக்கு அதிபதியாக இருந்தவன் ஒரு நிமிடத்தில் தெருக்கோடிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாழ்க்கைச் சக்கரம் ஒரு மனிதனுக்கு நல்லது கெட்டதை உணர்த்தக்கூடிய விஷயம் தான். உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தாழ்ந்த நிலைக்கு செல்வதும், தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்வதும் இயற்கையின் நியதி. இதை மாற்ற யாராலும் முடியாது. ஆனால் இந்த அதிர்ஷ்ட காற்றை நம் வசப்படுத்த கூடிய ஒரு தாந்திரீக பரிகாரம் உள்ளது. அதை பற்றி தான் இன்று பார்க்க போகின்றோம்.

இந்த தாந்திரீக ரீதியான பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் ஜாதிக்காய். நாட்டு மருந்து கடைகளில் விற்கும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 1 ஜாதிக்காயை பூஜையறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வைத்து விட வேண்டும். அந்த கிண்ணத்தில் ஒரு பச்சை கற்பூரத்தை போட்டு வையுங்கள். தினமும் காலையில் எழுந்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கிண்ணத்தில் இருக்கும் ஜாதிக்காயை மட்டும் எடுத்து உங்கள் வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பணம் வரவு இருக்க வேண்டும். பண வரவு இருக்க வேண்டும். பண வரவு இருக்க வேண்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு அந்த ஜாதிக்காயை அந்த கிண்ணத்திலேயே வைத்து விடுங்கள். அதன் பின்பு குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வழிபாடு செய்துவிட்டு, உங்களுடைய வேலையை செய்ய தொடங்கலாம். அவ்வளவு தான். தினம் தோறும் ‘பணவரவு இருக்க வேண்டும்’ என்ற மந்திரத்தை கையில் ஜாதிக்காயை வைத்துக்கொண்டு சொன்னால் பணவரவு தானாக உங்களைத் தேடி வரும்.

இந்த ஜாதிக்காய்க்கு அவ்வளவு ஒரு பெரிய சக்தி உள்ளது. நீங்கள் சொல்லக் கூடிய விஷயத்தை அப்படியே நடத்தி தரும். இந்த தாந்திரீக ரீதியான பரிகாரம் வெறும் பண வரவுக்கு மட்டுமல்ல. இது தவிர உங்களுடைய மனதில் வேறு ஏதாவது குறிக்கோள் இருந்தால் கூட அதை நிறைவேற்றிக் கொள்ள இந்த பரிகாரத்தை செய்யலாம். (ஜாதிக்காயை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று அவசியம் கூட இல்லை. ரொம்ப நாள் ஆகிவிட்டது எனும் பட்சத்தில், பழைய ஜாதிக்காயை லேசாக மண்ணில் புதைத்து வைத்துவிட்டு புதிய ஜாதிக்காயை பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம்.) இந்த ஜாதிக்காயை கையில் வைத்துக் கொண்டு தினம் தினம் நீங்கள் என்ன கேட்கிறீர்களோ, அந்த வரத்தை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுத்து விடும்.

- Advertisement -

ஆனால் இன்று ஜாதிக்காயை கையில் வைத்து கேட்ட வரம் நாளைக்கு கிடைக்க வேண்டும் என்று நிச்சயமாக நினைக்கக்கூடாது. எல்லா விஷயத்திற்கும் நேரம் காலம் என்ற ஒன்று இருக்க வேண்டும் அல்லவா. நேரமும் காலமும் கைகூடி வரக்கூடிய சமயத்தில் உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது நிச்சயம் நடக்கும். வரக்கூடிய அதிர்ஷ்டம் உங்கள் வாசல் கதவை தட்டாமல் போகவே போகாது. (அதேபோல் ஒரே குறிக்கோளை தினமும் சொல்லுங்கள். தினம் தினம் ஒரு குறிக்கோளை வைக்கக்கூடாது.)

இதையும் படிக்கலாமே: வெட்டியான வீண் செலவுகளை குறைக்க, இந்த வெள்ளைப் பொருளை உங்கள் தலையை சுற்றி போடுங்கள் போதும். சேமிப்பு பல மடங்கு உயரும்.

ஆனால் இந்த ஜாதிக்காயை கையில் வைத்துக்கொண்டு அடுத்தவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்றோ அல்லது வேறு ஏதாவது கெட்ட விஷயத்திற்கோ வேண்டுதலை வைக்கக்கூடாது. நிச்சயமாக அது நிறைவேறாது. உங்களுடைய வேண்டுதல் நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும். நல்லதை நினைத்து பரிகாரத்தை செய்பவர்களுக்கு சீக்கிரம் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -