ஜய பேரிகை கொட்டடா – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai
- Advertisement -

ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா!
ஜய பேரிகை கொட்டடா!

பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்
பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் (ஜய பேரிகை)

- Advertisement -
Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

இரவியி னொளி யிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினைக்கண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம் (ஜய பேரிகை)

காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம். (ஜய பேரிகை)

- Advertisement -

– பாரதியார்

இதையும் படிக்கலாமே:
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை

English Overview:
Here we have Bharathiyar Kavithaigal – Jaya Berigai.”Jaya berigai kottadaa lyrics in Tamil” is the first line of this Bharathiyar Padal.

- Advertisement -