ஜூலை மாதம் மைத்ரேய முகூர்த்தம்! எவ்வளவு பெரிய கடனையும் சுலபமாக திருப்பித் தர இந்த நேரத்தை யாரும் தவற விடாதீங்க.

mahalashmi2
- Advertisement -

கடன் இல்லாத வாழ்வு தான் ஒரு மனிதனுக்கு பெருவாழ்வு,  சந்தோஷமான வாழ்வு. அந்த கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றோம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் செலவை சமாளிக்க முடியாத சூழ்நிலையில் கடன் வாங்கி விடுகின்றோம். சில சமயங்களில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி குட்டி போட்டு கடன் சுமை அதிகமாகிவிடும். இந்த கடன் பிரச்சனையில் இருந்து எளிமையாக விடுபட வேண்டும் என்றால் நீங்கள் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

மைத்ரேய முகூர்த்தத்தில் செய்ய வேண்டிய எளிமையான சின்ன சின்ன பரிகாரங்களை செய்து வந்தாலே உங்கள் கடன் பிரச்சனை சீக்கிரம் சரியாகிவிடும். இந்த மாதம், அதாவது ஜூலை மாதத்தின் மைத்ரேய முகூர்த்தம் எந்த தேதியில், எந்த நேரத்தில் வரப்போகிறது என்பதை பற்றியும், அந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் என்ன பரிகாரம் செய்வது என்பதை பற்றியும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

1.7.2023 சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.40 வரை மைத்ரேய முகூர்த்தம்.
11.7.2023 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணி முதல் 02.00 மணி வரை மைத்ரேய முகூர்த்தம்.
28.7.2023 வெள்ளிக்கிழமை காலை 7.00 முதல் 9.00 மணி வரை மைத்ரேய முகூர்த்தம்.

இன்றைய தினம் சனிக்கிழமை வந்த மைத்ரேய முகூர்த்தத்தை தவற விட்டு விட்டோம். பரவாயில்லை. இருந்தாலும் இந்த மாதத்தில் இருக்கும் மற்ற இரண்டு மைத்திரேய முகூர்த்தத்தில் என்ன பரிகாரம் செய்வது என்பதை தொடர்ந்து பார்ப்போம். 11/7/2023 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை இந்த மைத்ரேய முகூர்த்தம் வந்திருப்பதால் துர்க்கை அம்மனை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யப்போகின்றோம். வீட்டிலேயே பூஜை அறையில் துர்க்கை அம்மனை நினைத்து ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு பிரியாணி இலையை எடுத்து அதில் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனையை எழுதுங்கள். எத்தனை பேருக்கு எவ்வளவு கடன் தொகை கொடுக்க வேண்டுமோ, அதை எல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு பிரியாணி இலையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு 3 பேரிடம் கடன் வாங்கி இருந்தால், மூன்று பிரியாணி இலைகள் இருக்கும். (ரமேஷிடம் வாங்கிய 1,00,000 ரூபாய் கடனை சீக்கிரம் திருப்பி தர வேண்டும்.) இப்படி எழுதி வைக்கவும்.

பூஜை அறையில் துர்க்கை அம்மனையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டிக்கொண்டு எழுதிய பிரியாணி இலைகளை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, கடனையெல்லாம் திருப்பி கொடுத்து விட்டோம். பண கஷ்டமெல்லாம் தீர்ந்து விட்டது. செல்வ வளம் குவிக்கின்றது, என்று நினைத்து அந்த பிரியாணி இலையை அந்த விளக்கில் எரித்து பொசுக்கி விடுங்கள். சாம்பலை தண்ணீரில் கரைத்து கீழே கொட்டி விடலாம். இந்த பரிகாரத்தை மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக உங்கள் கடன் சுமை ஏதாவது ஒரு ரூபத்தில் அடைவதற்கான வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும்.

- Advertisement -

28.7.2023 வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை இருக்கக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தில் என்ன பரிகாரம் செய்வது. வெள்ளிக்கிழமை சேர்ந்து வந்திருப்பதால் இது மகாலட்சுமிக்கு உயரிய மைத்ரேய முகூர்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. அதுவும் காலை நேரத்திலேயே வந்திருக்கிறது. மேலே சொன்னபடி ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வையுங்கள்.

மகாலட்சுமி தாயை நினைத்துக் கொள்ளுங்கள். இதற்கு கூடவே பாசிப்பருப்பு பாயாசத்தை நிவேதனமாக கட்டாயம் வைக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை வந்திருக்கும் மைத்திரேய முகூர்த்தம் அன்று எப்படி பிரியாணி இலையில் கடன் தொகையை எழுதி விளக்கில் எரித்தீர்களோ, அதே போல மகாலட்சுமியையும் குலதெய்வத்தையும் நினைத்து இந்த வெள்ளிக்கிழமையும் பிரியாணி இலையில் கடன் பிரச்சினையை எழுதி அந்த நெய் ஊற்றி ஏற்றிய தீபச்சுடரில் எரித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு முன்னேற்றம் இல்லாமல் தவிப்பவர்கள் விநாயகருக்கு இந்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், லாபம் கொட்டோ கொட்டுன்று கொட்டும். தொழிலில் முன்னேற்றம் அடைய யாரும் அறியாத ரகசிய வழிபாடு.

அவ்வளவுதான். எளிமையான இந்த இரண்டு பரிகாரம் நீங்கள் நம்ப முடியாத நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்க்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -