தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு முன்னேற்றம் இல்லாமல் தவிப்பவர்கள் விநாயகருக்கு இந்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், லாபம் கொட்டோ கொட்டுன்று கொட்டும். தொழிலில் முன்னேற்றம் அடைய யாரும் அறியாத ரகசிய வழிபாடு.

vinayagar dheepam
- Advertisement -

ஒவ்வொருவரும் ஒரு தொழிலை தொடங்க எவ்வளவு பாடுபட்டு இருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அப்படி பாடுபட்டு ஆரம்பித்த ஒரு தொழில் நல்ல முறையில் நடந்து அதில் லாபம் சம்பாதித்தால் தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெருகும். அப்படி அல்லாமல் நாம் தொடங்கும் தொழில் வியாபாரம் எதுவாக இருந்தாலும் அப்படியே முடங்கிப் போனால் வாழ்க்கையே சூனியம் ஆகி விடும். இது போன்ற வேதனையில் தவிப்பவர்கள் விநாயகருக்கு இந்த நேரத்தில் தீபம் ஏற்றி வந்தால் தொழிலில் நல்ல லாபத்தை அடையலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தொழிலில் லாபம் வர ஏற்ற வேண்டிய தீபம்
எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் நேரம் காலம் பார்த்து தொடங்க வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு நேரத்தை மையமாகக் கொண்டது தான் இந்த பரிகாரம். இந்த பரிகாரத்தை எல்லா தொழில் செய்பவர்களும் செய்யலாம். தொழிலில் சிறந்து விளங்குவதற்காகவே சாஸ்திரங்கள் சொன்ன அற்புதமான ஒரு ரகசிய பரிகாரம் என்றும் இதை சொல்லலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக நாம் வீட்டில் பயன்படுத்தும் தினசரி காலண்டரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பின்புறம் இருக்கும் கௌரி பஞ்சாகத்தில் லாபம் என்ற ஒரு நேரம் குறிப்பிட்டிருக்கும். ஒரு நாளில் இரண்டு முறை வரும் இந்த நேரம் தான் நம்முடைய தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பொன்னான நேரம். இந்த பரிகாரத்தை செய்ய நேரம் மட்டும்தான் முக்கியமே தவிர எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம்.

தொழிலில் முன்னேற்றம் இல்லை. தடை மேல் தடை வந்து கொண்டு இருக்கிறது. லாபம் அதிகமாக வர வேண்டும் என நினைப்பவர்கள், எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்ய கூடிய அன்றைய தினத்தில் லாபம் என வரக் கூடிய அந்த நேரத்தில் உங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த லாப நேரமானது ஒன்னரை மணி நேரம் இருக்கும் இந்த நேரம் முழுவதும் நீங்கள் அந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று வேண்ட வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகார தீபத்தை தொடர்ந்து 48 நாட்கள் வரை ஏற்ற வேண்டும். இடையில் எந்த காரணத்தை கொண்டும் தீபம் ஏற்றுவதை நிறுத்தக் கூடாது. பெண்கள் மாதவிலக்கான நேரங்களை கணக்கில் கொள்ளாமல் தொடர்ந்து ஏற்றலாம். அதே போல் இந்த தீபம் ஏற்றி வரும் நாளில் உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாள் எதுவோ அந்த நாளில் ஒரு முழு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு விநாயகர் முன்பு ஏற்றுங்கள். இந்த தீபம் குறைந்தது 12 நாழிகைகள் வரை எரிய வேண்டும். இதுவும் மிகவும் முக்கியம்.

இதையும் படிக்கலாமே: நீண்ட வருடம் குழந்தை இல்லாதவர்கள் வெள்ளிக் கிழமையில் செய்ய வேண்டியது என்ன? பிள்ளை வரம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

48 நாட்கள் ஏற்றும் இந்த தீபத்துடன் இந்த ஒரு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடும் போது உங்கள் தொழிலில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை என்னும் அளவிற்கு தொழில் விருத்தி அடையும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து விநாயகரின் அருள் ஆசியுடன் உங்கள் தொழிலில் சிறந்து விளங்கி ஓஹோவென வாழுங்கள்.

- Advertisement -