நவ கிரகங்களால் ஏற்படும் அத்தனை பாதிப்புகளுக்கும் தீர்வு தரும் ஒரே ஒரு விளக்கு. இந்த விளக்கை ஏற்றினால் நவகிரஹங்கள் நமக்கு நல்லது மட்டுமே செய்யும்.

Kaali-Goddessjpg
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டதை மாறி மாறி கொடுத்து, வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரியவைக்க வேண்டிய வேலையை தான் நவகிரகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. நமக்கு நல்ல நேரம் நடந்து கொண்டிருக்கும் போது, நாம் செய்யும் தவறுகளால் நமக்கு பெரியதாக பாதிப்புகள் எதுவும் வராது. அதே சமயம் நம்முடைய நேரம் கொஞ்சம் தடுமாறும் போது, நாம் நல்லதையே செய்தாலும் அதன் மூலம் நமக்கு பாதிப்புகள் ஏற்படும். இதற்கு என்ன காரணம். நேரம் நல்லதாக இருக்கும் போது நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையை தான், நேரம் சரியில்லாத போது நமக்கு அடியாக விழுகின்றது.

navagragham-1

நமக்கு நல்ல காலம் நடக்கின்றது. எதை தொட்டாலும் வெற்றி, வாழ்க்கையில் அடுத்தடுத்த படிக்கு மேலே சென்று கொண்டே இருக்கின்றோம், எனும் போது தான் நாம் கொஞ்சம் உஷாராக செயல்பட வேண்டும். எல்லாம் நல்லது தானே நடக்கிறது. கொஞ்சம் குறுக்கு வழியில் சென்று தான் பார்ப்போமே என்று கொஞ்சம் மனம் தடுமாறி விட்டால் நம்முடைய கதை முடிந்தது. அவ்வளவு தான். எந்த சூழ்நிலையிலும் நாம் நேர்மையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்நாள் முழுவதும் நல்ல வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

- Advertisement -

சரி, நாம் செய்த வினைகள் நமக்கே திரும்பி விட்டது. நாம் செய்த தவறுகளுக்கு நவகிரகங்களினால், கஷ்டங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றது. செய்த பாவங்களில் இருந்து தப்பிக்க, நவ கிரகங்களின் பிடியில் இருந்து வெளிவர, நாம் என்ன பரிகாரம் செய்வது அதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

gold arali

இந்த பரிகார தீபத்தினை வீட்டில் ஏற்ற முடியாது. ஏதாவது ஒரு உக்கிரமான தெய்வத்தின் கோவிலில் தான் ஏற்ற வேண்டும். காளி, அங்காள பரமேஸ்வரி, பிரத்யங்கிரா தேவி, இப்படி உங்கள் வீட்டின் அருகில் எந்த பெண் உக்கிர தெய்வங்கள் இருந்தாலும் சரி. வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று காலை அல்லது மாலை எப்போது வேண்டும் என்றாலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

- Advertisement -

கோவிலுக்கு செல்லும்போது மூன்று மண் அகல் விளக்குகள், வேப்ப எண்ணெய், மஞ்சள் நிறத்தில் திரி, மஞ்சள் நிற அரளி பூ இவைகளை எடுத்துச் செல்லவேண்டும். மஞ்சள் நிற அரளிப்பூ என்றால், அந்த செடியில் இருக்கும் காய் விஷத்தன்மை கொண்ட காய். அந்த செடியில் பூக்கக்கூடிய மஞ்சள் நிற அரளிப்பூ தான் நமக்கு தேவை.

deepam

கோவிலுக்கு சென்று இந்த மஞ்சள் அரளிப்பூவை தெய்வத்திற்கு கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு, மூன்று விளக்குகளில் வேப்பெண்ணை ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த மூன்று விளக்குகளின் சுடரும் ஒருசேர எரியும்படி வைத்துவிடவேண்டும். அதாவது மண் அகல் விளக்குகளை முக்கோண வடிவில் வைத்தால் மூன்று தீபச்சுடரூம் ஒரே இடத்தில் எரியும் அல்லவா. மூன்று தீபமும் இணைந்து எரியும்படி அந்த கோவிலில் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

sivakaali amman

அதன் பின்பு அம்மனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கிரக தோஷங்கள் உங்களுக்குப் பெரிய பாதிப்பை கொடுக்கக்கூடாது என்று முழுமனதோடு அம்பாளின் பாதங்களைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து 18 வாரங்கள் தீபத்தை ஏற்றினால் ராகு தோஷம், கேது தோஷம், சனி பகவானால் பிரச்சனை, குருவால் பிரச்சினை, இப்படி நவகிரகங்களில் எந்த கிரகத்தினாலும் உங்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். வாழ்க்கையில் நல்லது நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கெடுதல் நடக்காமல் தடுக்க கூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -