மொத்த கடனையும் அடைக்கும் ஒரு ரூபாய் பரிகாரம்.

chevvai
- Advertisement -

வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் கடன் இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஒரு சில பேர், அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாக வாழ்கிறார்கள். ஒரே பூமியில் பிறந்தவர்கள் தானே. ஆனால் மனிதர்களுக்குள் எதற்கு இந்த வேறுபாடு. ஒருவன் பணக்காரனாக சந்தோஷமாக இருக்கின்றான். ஒருவன் கடனில் சிக்கி தவிக்கின்றான்.

இதற்கெல்லாம் அவர் அவருடைய கர்ம வினை நிச்சயமாக ஒரு காரணமாக நிற்கும். இருந்தாலும், இந்த மார்வாடிகள் கடைபிடிக்கும் சூட்சமத்தை நாம் கொஞ்சம் பின்பற்றி பார்ப்போமே. என்னதான் நடக்கிறது என்று. கண்ணை மூடிகிட்டு இதை செய்தால் கடன் தீரும் என்று செவ்வாய்க்கிழமை மதியம் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை மட்டும் செஞ்சு பாருங்களேன். பிறகு என்ன நடக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

- Advertisement -

கடன் தீர செவ்வாய்க்கிழமை பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை மதியம் 1.15க்கு செய்ய வேண்டும். சரியாக இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும். ஒரு வெள்ளை கவர் எடுத்து, அதன் உள்ளே நீங்கள் ஒரு ரூபாயை வைத்து விடுங்கள். அந்த கவருக்கு மேலே சிவப்பு நிற பேனாவைக் கொண்டு, யாருக்கு நீங்கள் பணத்தை கொடுக்க வேண்டுமோ, அந்த நபரின் பெயரை எழுத வேண்டும்.

உதாரணத்திற்கு சுரேஷிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடன் அடைய வேண்டும். என்று எழுதி அந்த கவரை ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள் அவ்வளவுதான். நீங்கள் சுரேஷிடம் கைநீட்டி வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் அடைந்துவிடும். அப்படி என்றால் என்ன அர்த்தம் ஒரு லட்ச ரூபாய் பணம் சீக்கிரம் உங்களுக்கு வந்து சேர்த்துவிடும்.

- Advertisement -

இதற்குப் பின்னால் என்ன ஜோதிடம் மறைந்திருக்கிறது தெரியுமா. செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில், அதிலும் இந்த மதியம் 1.15 நேரம் என்பது குளிகை நேரம். இந்த நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய செயலை திரும்பத் திரும்ப செய்ய வைக்கும். நீங்க இந்த நேரத்தில் கடனை திருப்பிக் கொடுத்தால் சீக்கிரம் கடனை திருப்பிக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளை இந்த பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதுதான் பரிகாரம்.

புரிகிறதா. பத்து லட்சம் கடன் இருக்கிறது. ஒரு லட்சம் கையில் கிடைத்து விட்டது. யார் நமக்கு 10 லட்சம் கொடுத்தாரோ, அவருக்கு இந்த ஒரு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்கப் போறீங்க. செவ்வாய்க்கிழமை மதியம் 1.15 மணிக்கு அந்த ஒரு லட்ச ரூபாயை கொண்டு போய், கடன் தந்தவரிடம், பணத்தை திருப்பிக் கொடுத்து தான் பாருங்களேன் பிறகு நடக்கும் அதிசயத்தை.

- Advertisement -

கடன் வாங்கி விட்டேன் ஆனால் திருப்பிக் கொடுக்க ஆயிரம் ரூபாய் கூட இல்லை என்பவர்களுக்காக தான் ஒரு ரூபாய் உதாரணத்திற்கு சொல்லப்பட்டுள்ளது. (வாங்கிய கடனை ஒவ்வொரு ரூபாயாக திருப்பிக் கொடுத்தால் கடன் காரர்கள் உதைப்பார்கள் அதற்காகத்தான் பரிகாரத்திற்கு ஒரு ரூபாய்).

நீங்கள் இதை ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் மதியம் 1.15 மணிக்கு ஒரு வெள்ளை கவரை எடுத்து, அதன் உள்ளே உங்களால் முடிந்த தொகை, ஆயிரமோ இரண்டாயிரமோ பத்தாயிரமும் கூட வைத்து, அந்த கவருக்கு மேலே சிவப்பு நிற பேனாவைக் கொண்டு நீங்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ, அந்த நபரின் பெயரை எழுதி வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சூரிய பகவானால் ஏற்படும் உடல் உபாதைகளும் பரிகாரங்களும்

பத்து வாரம் செவ்வாய்க்கிழமை செய்தால் பத்து கவர் சேரும் அல்லவா அதன் உள்ளே இருக்கும் பணத்தை எல்லாம் ஒன்றாக எடுத்து போட்டு கடன் காரருக்கு கடனை திருப்பிக் கொடுக்கலாம். பத்து வாரம் மட்டுமல்ல கடன் முடியும் வரை நீங்கள் இந்த பரிகாரத்தை தொடரலாம். இப்படி செய்து வர வர உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாக குறைவதை உணரலாம்.

- Advertisement -