மீளாத கடன் துயரிலிருந்து மீண்டு வர இரவு தூங்கும் போது இதை தலையனைக்கு அடியில் வைத்து கொள்ளுங்கள் போதும். இதனால் கடன் அடைவதோடு பண புழக்கமும் அதிகரிக்கும்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று தான். என்ன தான் நம் தேவைகளை சுருக்கிக் கொண்டு வாழ முயன்றாலும் கூட, சில சந்தர்ப்பங்களில் நாம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். அப்படி வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் பலரும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதையும் கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படியான சூழ்நிலை மாற இந்த ஒரு எளிய பரிகாரம் தீர்வாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு தெரிந்துகொள்ளலாம்.

இந்த கடனை பொறுத்த வரையில் வாங்கும் முன் ஒரு முறைக்கு 100 முறை யோசிப்பது மிகவும் நல்லது. நம் வருமானம் என்ன? நம்மால் கடன் வாங்கிய பிறகு அதை அடைக்க முடியுமா? இதை எல்லாம் யோசித்து வாங்குவது தான் சரி. சில நேரங்களில் இதையெல்லாம் யோசிக்க கூட முடியாத அளவிற்கு நமக்கு நெருக்கடிகள் நேர்ந்து விடகூடும். அதை தவிர்க்கவும் முடியாது. இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்த தான் எளிய பரிகாரம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசை வருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாக செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு எலுமிச்சை பழத்தை நல்லதாக வாங்கிக் கொள்ள வேண்டும். இது முற்றிலும் மஞ்சள் நிறமாக புள்ளிகள் ஏதும் இல்லாத பழமாக இருக்க வேண்டும். இந்த பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு கிண்ணம் அல்லது டம்ளரில் பன்னீரை ஊற்றி அதில் எலுமிச்சை பழத்தை போட்டு ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் எலுமிச்சை பழத்தின் மூலம் வெளியிலிருந்து வந்திருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விடும்.

அதன் பிறகு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த எலுமிச்சை பழத்தை வைத்த பின் ஒரு வெள்ளைத் தாளில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்கள், எவ்வளவு கடன் வாங்கினீர்கள், எப்போது திருப்பி தர வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை தெளிவாக அந்த தாளில் எழுதி இந்த எலுமிச்சை பழத்துடன் வைத்து அந்த துணியை ஒரு மஞ்சள் நிற நூலில் சுற்றி கட்டி விடுங்கள்.

- Advertisement -

கட்டிய இந்த மூட்டையை இரவு உறங்கும் போது உங்கள் தலையணைக்கடியில் வைத்து விட்டு உறங்கி விடுங்கள். இதை மூன்று நாட்கள் செய்த பிறகு மூன்றாவது நாள் அம்மாவாசை தினத்தன்று உங்களின் படுக்கை விரிப்புகள் தலையணை உறைகள் அனைத்தையும் எடுத்து துவைத்து விடுங்கள். இந்த முடிச்சை உங்கள் தலையை சுற்றி கால் படாத இடத்திலோ அல்லது தண்ணீரிலோ போட்ட பிறகு தலைக்கு குளித்து விடுங்கள்.

இதை செய்யும் அன்றைய தினத்தில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ராகு காலத்தில் சென்று 9 எலுமிச்சை பழங்களை மாலையாக தொடுத்து அம்மனுக்கு சாற்றி விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு வந்து விடுங்கள். வழிபடும் போதே நீங்கள் எழுதிய பிரச்சனை தீர வேண்டும் என்றும் அதை தீர்த்ததற்கான நன்றியை கூறி வணங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறதா? இவற்றை செய்தாலே போதும் கெட்ட கனவுகள் வராமல் நிற்பதோடு வீட்டில் நேர்மறை ஆற்றலும் பெருகும்.

இந்த பரிகாரம் உங்களின் கடன் பிரச்சனையை தீர்ப்பதோடு அதை தீர்ப்பதற்கான பணவரவையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தான் அம்மனை வணங்கும் போது கடன் தீர்க்கவும், தீர்த்ததற்கான நன்றியையும் சேர்த்து வேண்ட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடையவர்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து அந்த அம்பிகையின் அருளாசியுடன் கடன் இல்லாத வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -