கடன் தீர செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

murugan cash
- Advertisement -

மனிதனை பாடாயப்படுத்தக் கூடிய விஷயங்களில் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் கடன் வாங்காத வரை அவருடைய வாழ்க்கை சொர்க்கத்தில் வாழ்வது போல தான். ஆனால் கடன் என்ற ஒன்று வந்து விட்டால் ஒவ்வொரு நாளும் நரக வேதனை தான். இது கடனை அடைக்க முடிந்தாலும் சரி அடைக்க முடிந்தாலும் கடன் எப்போதும் சுமை தான்.

இன்றைய காலக்கட்டத்தில் கடனை தீர்க்க பல வகையான பரிகார முறைகள் இருந்தாலும் கடனை தீர்க்கவும் கடன் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யவும் உகந்த நாள் கடவுள் எனில் செவ்வாய் கிழமை முருகப்பெருமானை வேண்டி வழங்குவது தான். அந்த வகையில் செவ்வாய்க் கிழமையில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் கோதுமையை வாங்கி மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை மாவாக வாங்குவதை விட கோதுமையை வாங்கி அரைப்பது சிறந்தது. அதன் பிறகு எவ்வளவு கோதுமை மாவு எடுக்கிறீர்களோ, அதே அளவு சர்க்கரையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியான பெரிய உருண்டையாக பிடித்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த பெரிய உருண்டையிலிருந்து சின்ன கோழி குண்டு போல சிறிய உருண்டைகளாக செய்து கொள்ளுங்கள். இது குறைந்தது ஒரு 30 லிருந்து 40 உருண்டை வரும் படி செய்து வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருண்டை எறும்பு, காகம் எடுக்காமல் பத்திரமாக காய வைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று காலை குளித்து முடித்த பிறகு இதை உங்கள் கையில் எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதை உங்கள் தலையில் இருந்து அடி வயிறு வரை மூன்று முறை வலது புறமாக சுற்றி உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று முருகப்பெருமானை நினைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் வீட்டில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.

இப்படி சுற்றி எடுத்த இந்த உருண்டைகளை ஒரு பேப்பரில் சுற்றி கையில் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியில் வேலைக்கு செல்லும் பொழுது உங்கள் வீட்டின் அருகில் குளம் இருந்தால் அதில் மீன்களுக்கு உணவாக இதை போட்டு விடுங்கள். குளம் இல்லாத பட்சத்தில் எறும்பு புற்று, பாம்பு புற்று போன்றவற்றில் இதை உருண்டையை தூளாக்கி போடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தொழில் மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர வழிபாடு.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பொழுது கடன் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கள் நினைத்துப் பார்க்காத வகையில் நிவர்த்தி ஆகும். இத்துடன் முருக வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வரும் பொழுது கடன் காணாமல் போய்விடும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -