தொழில் மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர வழிபாடு.

durgai valipadu
- Advertisement -

அன்றைய காலத்தில் ஆண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் இருந்தார்கள். பெண்கள் வீட்டிலிருந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். அதே சமயம் ஆண்களும் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாங்கள் செய்கின்ற தொழிலிலோ அல்லது வேலையிலோ ஏதாவது தடைகளோ தடங்கலோ தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்தில் துர்க்கை அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் நவகிரகங்களே காரணமாக விளங்குகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அந்த வகையில் நம்முடைய தொழில் அல்லது வேலையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணமாக திகழக்கூடியவர் அங்காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானால் நமக்கு கடன் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படும். அதே சமயம் தொழில் முடக்கம், தொழில் சரிவு, தொழில் நஷ்டம் ஏற்படுதல், வேலையில் பிரச்சனை, வேலையில் இருந்து நீக்கம் என்று பிரச்சினைகள் ஏற்படும்.

- Advertisement -

இவ்வாறு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுவதோடு நவகிரகங்களில் இருக்கக்கூடிய அங்காரகனுக்கும் செவ்வரளி பூக்களை வழங்கி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். இப்படி செய்தால் செவ்வாய் பகவானால் ஏற்பட்டிருந்த இருந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வழிபாட்டை வீடு மனை வாங்குதல் விற்றல் போன்றவற்றிற்கும் செய்யலாம்.

செவ்வாய் பகவானை தவிர்த்து, வேறு சில காரணங்களாலும் தொழிலிலும், வேலையிலும் பிரச்சனைகள் ஏற்படும். அப்படிப்பட்ட பிரச்சினைகளை சரி செய்வதற்கு சுத்தமான சந்தன கட்டையை வாங்கி சுத்தமான இடத்தில் அதை இழைத்து சந்தனத்தை எடுத்து ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கோ அல்லது அம்மன் ஆலயங்களுக்கோ சென்று அங்கு வீற்றிருக்கும் துர்க்கை அம்மனின் நெற்றியில் ஒரு பொட்டு வைத்துவிட்டு, துர்க்கை அம்மனின் விரல் நகங்களுக்கு மருதாணி வைப்பது போல் சந்தனத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

கை, கால் விரல்களில் இருக்கக்கூடிய நகங்களில் இந்த சந்தனங்களை வைத்து துர்க்கை அம்மனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்து தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதத்தை நெய்வேத்தியமாக படைத்து துர்க்கை அம்மனை 11 முறை வலம் வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவர துர்க்கை அம்மன் மனமகிழ்ந்து நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தொழில் மற்றும் வேலையில் இருந்த தடைகளை தகர்த்து எறிவார் என்பது நிச்சயம்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் சண்டே சச்சரவுகள் நீங்க வழிபாட்டு முறை.

இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் எந்த சூழ்நிலையில் எந்த கிரகத்தால் பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த பாதிப்புகளை தீர்த்து நம்மை பிரச்சினைக்கு ஆளாக்காமல் நன்மைகளை மட்டுமே அந்த தாயான துர்க்கை அம்மன் வாரி வழங்குவார்.

- Advertisement -