எவ்வளவு முயற்சி செய்தாலும் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லையா? இந்த செவ்வாய் ஓரை பரிகாரத்தை ஒரு முறை செய்து பாருங்கள். கடன் கூடிய விரைவில் முழுவதுமாக அடைந்து விடும்

uppu parikaram
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் பண பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு சிலர் கடன் வாங்காமல் வருகின்ற வருமானத்தை வைத்து தங்களின் செலவுகளை குறைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் ஒருசிலரால் கடன் வாங்காமல் குடும்பம் நடத்த முடிவதில்லை. ஏதேனும் ஒரு அவசர தருவாயில் கடன் வாங்கி விடுகிறார்கள். அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் அதன் மூலம் வரும் பிரச்சனையை சமாளிக்க முடியாமலும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வாங்கிய கடனை தீர்ப்பதற்கு வழி கிடைக்காமல் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்து பாருங்கள். எந்த வழியிலாவது உங்களுக்கு இருக்கின்ற கடன் முழுவதுமாக அடைந்துவிடும். இதனை முழு நம்பிக்கையுடன் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து செய்து வாருங்கள். உடனே நல்ல பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜை செய்யும் பொழுதும், கோவிலுக்கு சென்று வரும் பொழுதும் வாங்கிய கடன் தீர வேண்டும் என்று பலரும் வேண்டிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் என்னதான் மனதில் வேண்டிக் கொண்டாலும் இந்த கடன் பிரச்சினைகளால் உண்டாகும் மன உளைச்சல்கள் அவர்களின் வழக்கமான வேலைகளைச் சரியாக செய்ய முடியாமல் மனக்குழப்பத்தை கொடுக்கிறது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் கடன் கொடுத்த நபர் எப்பொழுது வேண்டுமானாலும் வீடு தேடி வந்து சண்டை போடுவார்கள் என்று நினைத்துப் பார்த்தாலே மனதிற்குள் பயம் ஏற்படுகிறது. வருகின்ற பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது? அக்கம்பக்கத்தினர் நம்மைப் பார்த்து என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்.

இவ்வாறு கடன் பிரச்சனைக்காக பல பரிகாரங்கள் செய்து இருந்தாலும், பல கோவில்களுக்கு சென்று வந்திருந்தாலும் செவ்வாய்க்கிழமை ஓரையில் செய்யக்கூடிய இந்த பரிகாரம் கடனை அடைப்பதற்கு சிறந்த தருணமாக அமைகிறது. இந்த நேரத்தில் செய்யப்படும் இந்த பரிகாரத்தின் மூலம் எந்த வழியிலாவது பணம் கையில் வந்து நீங்கள் வாங்கிய கடனை உடனடியாக அடைக்க முடியும்.

- Advertisement -

இதற்காக இரண்டு கைகளால் சிறிது அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூஜை அறையில் மகாலட்சுமி தேவியின் முன் நின்று உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு, நான் வாங்கிய கடன் விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த கல் உப்பை ஒரு தாம்புல தட்டில் முழுவதுமாக பரப்பி வைக்க வேண்டும்.

பிறகு அந்த கல்லுப்பின் மீது ஆள்காட்டி விரலால் உங்களுக்கு இருக்கும் கடன் தொகையை லேசாக எழுத வேண்டும். பிறகு அதன் மீது ஒரு விரலி மஞ்சளை வைக்கவேண்டும். பின்னர் இந்த தட்டை சிறிது நேரம் பூஜை அறையில் அப்படியே வைத்துவிட வேண்டும். அதன்பிறகு விரலி மஞ்சளை பூஜை அறையில் வைத்து விட்டு, கல் உப்பைத் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு சரியான நேரம் செவ்வாய்க்கிழமை காலை 6 லிருந்து 7 மணி அல்லது 1 லிருந்து 2 மணி. இந்த இரண்டு நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் தவறாமல் செய்து விட வேண்டும்.

- Advertisement -