லாபம் தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு

narasimma
- Advertisement -

பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு, லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு. கடன் சுமையில் கஷ்டப்படுபவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு, லக்ஷ்மி ராசிமர் வழிபாடு. பணம் சம்பந்தப்பட்ட சிக்கலில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமா. உடனடியாக இந்த லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வதற்கு பல வழிகள் இருக்கிறது.

பல ஸ்லோகங்கள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் லட்சுமி நரசிம்மரை வழிபடுவதற்கு சமஸ்கிருதத்தில் உண்டான வரிகள் தான் மந்திரமாக கொடுக்கப்பட்டிருக்கும். இன்று எளிமையான தமிழ் வார்த்தைகளைக் கொண்டு லட்சுமி நரசிம்மரை வழிபட ஒரு மந்திரம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த ஸ்லோகத்தை தினமும் பூஜை அறையில் லட்சுமி நரசிம்மரை நினைத்து சொல்லுங்கள். பணகஷ்டத்திலிருந்து உடனடியாக விடுபடலாம். அது என்ன ஸ்லோகம் லக்ஷ்மி நரசிம்மருக்கு என்ன விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் உடனடியாக பணகஷ்டம் தீரும் என்பதை பற்றிய விரிவான தகவலை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கடன் தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு

லட்சுமி நரசிம்மரை வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். ஒரு மண் அகல் விளக்கில் கொஞ்சமாக புங்கை எண்ணெய் விட்டு, அதில் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். நரசிம்மருக்கு நீர்மோர் பானகம் அல்லது எலுமிச்சை பழ சாதம் பிரசாதமாக வைக்கலாம். பிறகு பூஜை அறையில் அமர்ந்து லட்சுமி நரசிம்மரை மனதார நினைத்து பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

கடன் சுமை குறைய நரசிம்மர் மந்திரம்

நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை!
சகோதரனாகவும், தோழனாகவும் இருப்பவனும் அவனே.
அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவனேதான்.
நமக்கு எஜமானனாகவும், எல்லாமுமாகவும்
நரசிம்மனே விளங்குகிறான்.

பூலோகம், விண்ணுலகத்திலும் நரசிம்மனே அருள்புரிந்து கொண்டிருக்கிறான்.
நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவனே வீற்றிருக்கிறான்.
நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாருமில்லை.
அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.

- Advertisement -

என்று சொல்லி நரசிம்மரை வணங்கி உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை நீங்கள் தொடங்கிய தொழில் நஷ்டத்தில் செல்கிறது என்றாலும் இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை செய்யலாம். தொழில் செய்யும் இடத்திலும் இந்த மந்திரத்தை சொல்லி நரசிம்மரை வழிபாடு செய்தீர்கள் என்றால், உங்களுடைய தொழில் லாபத்தை தொடும்.

கடன் சுமையிலிருந்து சீக்கிரம் விடுபடுவீர்கள். செல்வ செழிப்பில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு உயர்ந்து கொண்டே செல்வீர்கள். லட்சுமி நரசிம்மர் வழிபாடுகளில் மிக மிக எளிமையான வழிபாடு இது. அதே சமயம் மிக மிக சக்தி வாய்ந்த வழிபாடு. தொடர்ந்து 11 வாரம் வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் உங்களுடைய பிரார்த்தனை நடந்தே தீரும்.

அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்க வீட்டில் லட்சுமி நரசிம்மரின் திரு உருவப்படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. வெள்ளிக்கிழமை அந்த கடவுளை மனதார நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க தேங்காய் தீபம்

உங்க வீட்டு பக்கத்தில் நரசிம்மரின் கோவில் இருந்தால் அங்கே சென்றும் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். எளிமையான முறையில் தமிழில் சொல்லப்பட்டிருக்கும் மந்திரம் இது. எல்லோரும் படித்து பலன் அடையுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -