கடன் கரையை சொல்ல வேண்டிய வார்த்தை

mahalshmi3
- Advertisement -

நாம் வாயிலிருந்து வெளிவரக்கூடிய வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு பவர் இருக்கு. சில சமயம் நம்மை அறியாமல் சொல்லக்கூடிய வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். கோபத்தில் தான் திட்டி இருப்போம் ‘நான் சொல்ற பேச்சைக் கேட்காமல் போய்கிட்டே இருக்க, என்ன நடக்க போகுது பாரு’ என்று சொல்லி வாயை மூட மாட்டோம். பைக்கில் இருந்து கீழே விழுந்து வாரிக் கொள்வார்கள்.

நமக்கே மனசு கஷ்டமாயிடும். நாம் திட்டியல்தால் தானே இப்படி நடந்தது என்று. அப்படித்தாங்க, வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு சக்தி இருக்கிறது. அதனால் தான் நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே பேச வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இன்னிலிருந்து நல்லதையே பேசுறீங்க. நல்லதே நடக்கட்டும். சரி அப்படின்னா கடன் தீர என்ன வார்த்தை சொல்லணும்.

- Advertisement -

கடன் தீர சொல்ல வேண்டிய வார்த்தை

கடன் கரைஞ்சு போச்சு, கடனையெல்லாம் திருப்பி கொடுத்து விடலாம், கடன் பிரச்சனை சரியாகிவிடும், எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ‘அச்சோ இவளவு கடன் வந்திருச்சு, எப்படி திருப்பி தரப்போறேன்’ அப்படின்னு கட்டாயம் புலம்பக் கூடாது. கடன் பிரச்சனையை சரியாகிவிடும் சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் கடன் சரியாகிவிடும். கடன் போயிடும் போயிடும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் கடன் போய்விடும். சொல்லித்தான் பாருங்களேன்.

உங்க கையில் இன்றைக்கு காசு வந்துடுச்சு. அதை நீங்கள் கடன்காரர்களுக்கு திருப்பிக் கொடுக்கணும் என்றால் ரொம்ப நேர்மையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, உங்கள் கைக்கு வந்த மகாலட்சுமியை அப்படியே, உடனே கடன் கார்களுக்கு தூக்கி கொடுத்து விடக்கூடாது. ஒரு நாள் இரவு அது உங்களுடைய வீட்டில், உங்களுடைய பீரோவில் தங்கட்டும். பணத்தை எடுத்து வையுங்கள்.

- Advertisement -

அவசரப்படாதீங்க, பொறுமையாக அடுத்த நாள் கொண்டு போய் கடன்காரர்களுக்கு அந்த பணத்தை திருப்பி கொடுக்கவும். வந்த மகாலட்சுமியை மொத்தமாக கொண்டு போய் கொடுத்திடக் கூடாது. அதிலிருந்து ஒரு சின்ன தொகையை உங்கள் கையில் வைத்துக் கொண்டு மீதம் பணத்தை கடன் கார்களுக்கு கொடுக்க வேண்டும்.

பத்தாயிரம் ரூபாய் கடனை அடைக்க வேண்டும் உங்க கையில் பத்தாயிரம் தான் இருக்கு. அப்படின்னா 9 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுங்கள் மீதி ஆயிரம் ரூபாயை பிறகு கொடுக்கலாம். அந்த மாதிரி பண்ணனும்.

- Advertisement -

ஆனால் ஒரு மருத்துவ செலவுக்கு பணம் கேட்கிறார்கள். நாம காசு கொடுக்கணும் என்றால், மேலே சொன்ன எந்த விஷயத்தையும் பார்க்க கூடாது. அவசரத்துக்கு எந்த விதியையும் நாம் பின்பற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. அவசரத்துக்கு நீங்க எந்த நேரத்தில் எப்படி வேண்டும் என்றாலும் பணம் கொடுக்கலாம்.

அடுத்து ஒரு வழிபாடு. ஞாயிற்றுக்கிழமை என்றால் மாலை 4:30 மணியில் இருந்து 6:00 மணிக்குள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பைரவர் கோவிலுக்கு செல்லவும். கையில் ஒரு சின்ன புணுக்கு டப்பா வாங்கிட்டு போய் கொடுங்க. அர்ச்சகர் இடம் கொடுத்து அந்த புனுகை எடுத்து பைரவரின் மார்பு பகுதியில் தடவ சொல்ல வேண்டும்.

அந்த புனுகு டப்பாவை பைரவர் காலில் வைத்து அர்ச்சனை செய்து மனமாற வேண்டிக் கொள்ளுங்கள். பைரவர் மேல் தடவிய அந்தப் புனுகை கொஞ்சமாக கேட்டு மீண்டும் வாங்கிக்கோங்க. அதை எடுத்து புனுகு டப்பாவில் வைத்து வீட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த புனுகை தினம் தோறும் இரண்டு காது ஓரங்களில் நாம் தடவிக் கொண்டால் கடன் வராது என்று சொல்லப்பட்டுள்ளது. காதுக்கு பின்னாடி லேசாக தடவிக் கொண்டால் போதும்.

இதையும் படிக்கலாமே: வறுமை நீங்கி செல்வம் பெருக ஐயப்பன் வழிபாடு

நீங்கள் வைரவர் வழிபாடு செய்தாலே உங்களுக்கு கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். உங்களை யாரும் ஏமாற்ற மாட்டாங்க. உங்களுக்கு எதிரி தொல்லையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பைரவா நான் வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கணும். நிறைய பணம் சம்பாதிக்கணும் என்று வேண்டி ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் பைரவர் காலை பிடியுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்.

- Advertisement -