அவசர தேவைக்கு நீங்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க செய்யும் அற்புத மந்திரம்

cash
- Advertisement -

இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் நேரடியான அல்லது மறைமுகமான உதவி இல்லாமல் வாழ முடியாது என்பதும் நிதர்சன உண்மையாகும். இவ்வாறு ஏதேனும் ஒரு நேரத்திலாவது நமக்கு மற்றொருவரின் உதவி தேவைப்பட தான் செய்கிறது. மற்றவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கி வாழ்ந்தாலும் சில தவிர்க்கமுடியாத காலகட்டத்தில அடுத்தவர்களுடைய உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் உருவாகி விடுகிறது. இந்த உதவி பணமாகவோ, பொருளாகவோ அல்லது வேறு விதமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தேவைப்படுகின்ற நேரத்திற்கு அந்த உதவி கிடைக்க வேண்டும். இப்படி நீங்கள் எதிர்பார்க்கும் அந்த உதவி சரியான நேரத்தில் உங்களுக்கு கிடைக்கா ஒரு ஸ்லோகத்தை மனதில் உச்சரித்தால் மட்டும் போதும். எந்த வழியிலாவது உங்களுக்கான உதவி வந்து சேரும். வாருங்கள் அந்த ஸ்லோகம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பல நேரங்களில் பல விதமான பிரச்சனைகளை மனிதன் அனுபவித்து கொண்டு தான் வருகிறான். ஒரு சில நேரங்களில் அவர்களால் எதனையும் தனியாக இருந்து சமாளிக்க முடியாத சூழ்நிலை உருவாகி விடும். அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் எந்த உதவி கேட்க வேண்டும்? என்று மனக் குழப்பத்திற்கு வந்துவிடுவார்கள்.

- Advertisement -

அதிலும் குழந்தைகளில் உடல்நல பிரச்சனை, கல்வி சம்பந்தமான பிரச்சனை என்றால் சற்றும் தயங்காமல் மற்றவர்களிடம் உதவி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நாம் கேட்கும் உதவி உடனே கிடைக்குமா? என்பது தான் சந்தேகம். யாராக இருந்தாலும் அவர்களிடம் நாம் கேட்கும் தொகை கையில் இருந்தாலும் கூட, கேட்டவுடனேயே ஒரு சிலருக்கு அதனை கொடுக்க மனம் வராது.

ஏனென்றால் ஒரு முறை இவ்வாறு கொடுத்துவிட்டால், கேட்கின்ற உதவியை உடனே செய்து விட்டால், நாம் மறுபடியும் அவர்களை அடிக்கடி தொல்லை செய்வோம் என்ற எண்ணம் அவர்களின் மனதில் இருக்கும். எனவே சற்று சிரமப்பட்டு அதனை தயார் செய்து கொடுப்பது போல் நம்மிடம் நடந்து கொள்வார்கள். இதற்கு இரண்டு, மூன்று நாட்கள் கூட தாமதமாகும்படி செய்வார்கள். அதற்குள் நமக்கான பிரச்சனை வளர்ந்து கொண்டே சென்று விடும்.

- Advertisement -

உதவி கிடைக்க ஸ்லோகம்:
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.

தமிழ்மொழியில் இருக்கும் சிறப்பான மந்திரங்களை இதுவும் ஒன்று. தினமும் காலை வேளைகளில் மற்ற கடவுள்களின் நாமத்தை உச்சரிப்பதற்கு முன்பாகவே விநாயகரை நோக்கி சென்றுக்கொண்டு, இந்த ஸ்லோகத்தை 9 முறை மனதார சொல்லி பழக வேண்டும். வினைகளைத் தீர்க்கும் அந்த விநாயகப் பெருமானின் அருளால் உங்கள் துன்பங்களுக்கு ஏற்ற உதவிகள் நீங்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் உங்களை வந்தடையும்.

- Advertisement -