சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகத்தை ஒரு முறை உச்சரித்தாலும் இனி உங்கள் வாழ்நாளில் யாரிடமும் கடன் வாங்க மாட்டீர்கள்! கடன் தீர்ந்து பெருஞ்செல்வம் அடைய சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?

abirami-cash
- Advertisement -

ஒருவரிடம் சென்று கடன் கேட்பது என்பதும் ஒரு வகையில் பிச்சை கேட்பது போன்று தான்! நம்மிடம் இல்லாத ஒரு நிலையை கூறி, மற்றவர்களிடம் கூனி குறுகி நின்று, எனக்கு கடன் கொடுக்குமாறு கேட்பதை கூட சிலர் இன்று கௌரவம் என்று எண்ணுகிறார்கள். உங்களிடம் இல்லாததை நீங்கள் இருக்கும் ஒருவரிடம் சென்று கேட்கிறீர்கள், எனவே இது கௌரவமாக நினைக்கும் விஷயம் அல்ல! கடன் இல்லாத நிலையை மட்டுமே மனிதன் விரும்புகிறான். இத்தகைய நிலையை அடைவதற்கு தினமும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இன்றைக்கு கடன் வாங்கினால் அதை திருப்பிக் கொடுக்க தானே போகிறோம் என்று நினைப்பது தவறு. உங்களிடம் இல்லாத ஒரு விஷயத்தை, இன்னொருவரிடம் சென்று நீங்கள் கேட்பது ஒருபோதும் மதிப்பிற்குரிய விஷயம் அல்ல! எனவே கூடுமானவரை எவரிடமும் கடன் வாங்காத ஒரு நிலை இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் நல்லது. வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் கடன் வாங்கலாமே ஒழிய, ஆடம்பரத்திற்காகவும், தேவையில்லாமலும் நீங்கள் வாங்கினால் அதுவே உங்களுக்கு பெரும் துன்பத்தை வந்து கொண்டு வந்து சேர்த்து விடும்.

- Advertisement -

உங்களிடம் இல்லாத ஒரு பொருள், வேறு ஒருவரிடம் நிறைந்து காணப்படுகிறது. அவர்களிடம் சென்று நீங்கள் கேட்கும் பொழுது உங்களுடைய கை கூசும், நீங்கள் அவரை நிமிர்ந்து பார்க்கும் பொழுது உங்களுடைய கண்கள் கூசும். இவர் கடன் கொடுப்பாரா? இல்லையா? இவர் கொடுக்காவிட்டால் அடுத்து என்ன செய்வது? என்று புத்தி தடுமாறும். இத்தகைய வறுமையை, ஏழ்மையை விரும்பாதவர்கள் தினமும் இந்த ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

அபிராமி அந்தாதி:
இல்லாமை சொல்லி ஒருவர்தம்,
பால்சென்(று) இழிவுபட்டு,
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்நித்தம் நீடுதவம்,

- Advertisement -

கல்லாமை கற்ற கயவர்தம்,
பால்ஒரு காலத்திலும்,
செல்லாமை வைத்த திரிபுரை,
பாதங்கள் சேர்மின்களே!!!

இம்மந்திரம் அபிராமி அந்தாதி பாடலில் இடம் பெற்றுள்ள சக்தி வாய்ந்த மந்திரமாகும். கடன் நீங்கி பெருஞ்செல்வம் அடைய இம்மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்கள் வீட்டில் அபிராமி அன்னையின் திருவுருவப்படம் இருந்தால் அப்படத்தின் முன்பு அமர்ந்து தியான நிலையில் இம்மந்திரத்தை ஒரு முறை மனதார உச்சரியுங்கள். நம்முடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஒருவரிடம் எதிர்பார்த்து, இழிவான நிலையில் இருக்கும் இந்த இயலாமை கடன் வாங்க வைக்கிறது. ஆசையால், துன்பத்தால், இயலாமையால், வறுமையால் கடன் வாங்குபவர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு சூழலிலும் அவமானத்தை சந்திக்கின்றனர்.

இத்தகைய அவமானத்திலிருந்து விடுபட முடியாமல் பலரும் சிக்கிக் கொண்டு விடுகின்றனர் எனவே கடன் இல்லாத ஒரு நிலையை அடைய அபிராமி பட்டர் எழுதிய இந்த அபிராமி அந்தாதி பாடலை தினமும் ஒரு முறையாவது உச்சரிக்க வேண்டும். இதன் பலனாக யாருடைய தயவும் இல்லாமல், நம்முடைய சுய முயற்சியினால் நம்முடைய தேவையை நிறைவு செய்யும் துணிச்சலை பெறுகிறோம். மேலும் நம்மிடம் இல்லாவிட்டாலும் அதனால் உண்டாகக்கூடிய விளைவை ஏற்று அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இறைவனை முழுமையாக நம்பி, அவர்களை சரணடைந்து நம்முடைய முழு முயற்சியை கொடுத்து வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலை நமக்கு வராது. அத்தகைய ஒரு சூழ்நிலையை இறைவன் நமக்கு உருவாக்கி கொடுக்க மாட்டார் என்பது மட்டும் உறுதி!

- Advertisement -