தினமும் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வேண்டி கொண்டு ஊற்றினால் தீராத கடனும் தீர்வதோடு, இனி கடன் வாங்கும் சூழ்நிலையை இல்லாத அளவிற்கு பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

- Advertisement -

இன்று பெரும்பாலானோரின் கவலையே வாங்கிய கடனை எப்படி திருப்பி அடைப்பது என்பது தான். ஒவ்வொரு நாளும் ஓடி ஓடி சம்பாதித்து நல்ல முறையில் வாழ்கிறார்களோ இல்லையோ வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும், இஎம்ஐ கட்டவும் தான் சரியாக இருக்கிறது. கடன் தொல்லை இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்வது எத்தனை சுகமான ஒன்று. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ தினமும் ஒரு டம்ளர் தண்ணீரை இந்த முறையில் பயன்படுத்தினால் போதும் என்று ஆன்மீகம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வழிபாடுகளில் விருச்சிக வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு சில மரங்களுக்கு என்று தனிப்பட்ட ஆன்மீக பலன்கள் உள்ளது. அந்த வகையில் பெரும்பாலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு அரச மர வழிபாட்டை பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த பதிவில் நம் கடனை அடைக்க அசோக மர பரிகாரத்தை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்:
இந்தப் பரிகாரத்திற்கு உங்கள் வீட்டில் அருகில் அசோக மரம் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த மரத்தை வைத்து தான் பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் சின்னதாக ஒரு அசோக மரக்கன்றை தொட்டியில் வாங்கி வீட்டில் வைத்து விடுங்கள்.

காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பூஜை அறையில் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை வைத்த பிறகு தீபம் ஏற்றி கடன் தீர வேண்டும் என்று குலதெய்வம் இஷ்ட தெய்வங்களை முதலில் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு நீங்கள் எந்த கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்களோ அதை சொல்லி அந்த பிரச்சனை எனக்கு விரைவாக தீர வேண்டும். அந்த கடன் முழுவதுமாக அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு இந்த தண்ணீரை அசோக மரக்கன்று அல்லது அசோக மரத்திலும் ஊற்றி விடுங்கள். இதை தினமும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

இதே முறையில் இப்படி ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து வணங்கிய பிறகு அந்தத் தண்ணீரை சூரிய பகவானை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்த பிறகு அவருக்கு நாம் அபிஷேகம் செய்வது போல் இந்த தண்ணீரை கீழே கொட்ட வேண்டும். அப்பொழுது ஓம் சூர்யாய நமக என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய கடன் விரைவில் அடைவதுடன், மீண்டும் மீண்டும் கடன் வாங்குவது, வீண் விரயங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பது போன்றிவற்கு எல்லாம் நல்ல ஒரு எளிய பரிகாரமாக இதை சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தொடர் பிரச்சனைகளால் மன நிம்மதி இல்லாமல் வாடுகிறீர்களா? உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட்டு மன நிம்மதி பெற பரிகாரம்.

இந்த இரண்டு வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வரும் போது நம் வாழ்வில் இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, கடன் இல்லா வாழ்க்கையை வாழ்வதுடன், வீண்விரயங்கள் ஏற்படாமல் கையில் பணப்புழக்கம் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடன் அடைய இந்த பரிகாரத்தை செய்வதுடன் கடன் வாங்குவதற்கான சூழ்நிலையை முடிந்த வரையில் நாம் உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -