கடன் பிரச்சனையை தீர்க்க உதவும் பூ.

maruthani poo
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை என்பது ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்த ஒன்றாக தான் இருக்கிறது. ஏற்றங்கள் ஏற்படும் பொழுது கையில் பணப்புழக்கம் என்பது அதிகரிக்கும். அதே சமயம் இறக்கம் ஏற்படும் பொழுது கையில் இருந்த சேமிப்புகள் முதற்கொண்டு அனைத்துமே கரைந்து போய் பிறரிடம் இருந்து பணத்தை கடனாக வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக நிகழக்கூடிய ஒன்றுதான். இப்படி வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு பல முயற்சிகளை எடுத்தாலும் அடைக்க முடியவில்லை என்னும் பட்சத்தில் எந்த பூவை வைத்து எப்படி பரிகாரம் செய்தால் விரைவிலேயே கடன் பிரச்சனையை அடைக்க முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கடன் என்ற ஒன்று யாருடைய வாழ்க்கையிலும் ஏற்படக் கூடாது. அதையும் மீறி ஏற்பட்டால் அதை எந்த அளவுக்கு விரைவிலேயே தீர்த்து விட முடியுமா அந்த அளவுக்கு தீர்த்து விட வேண்டும். அப்படி தீர்க்க முடியாத சூழ்நிலையில் நம்முடைய முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும் தெய்வ வழிபாட்டையும் பரிகாரத்தையும் மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து விரைவிலேயே கடன் பிரச்சனை என்பது தீர்ந்துவிடும்.

- Advertisement -

இந்த பதிவில் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக நாம் செய்யக்கூடிய பரிகாரத்திற்கு நமக்குத் தேவைப்படுவது மருதாணி பூ. பொதுவாக மருதாணி இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பாள் என்று கூறப்படுகிறது. எந்த இல்லத்தில் மருதாணி செடி இருக்கிறதோ அந்த இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மருதாணி செடியில் இருக்கக் கூடிய மருதாணிப் பூ. நம்முடைய வழிபாட்டில் பல வகைகளில் உபயோகப்படுகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

மருதாணி பூவை நாம் சாம்பிராணி தூபம் போடும் பொழுது பயன்படுத்தினால் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. மேலும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த மருதாணி பூவை நாம் கடனை தீர்ப்பதற்காகவும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

ஒரு இரும்பு இல்லாத மூடி போட்ட டப்பா ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிற பேப்பரில் நாம் யார் யாருக்கெல்லாம் பணம் தர வேண்டுமோ அவர்களின் பெயரை எழுதி அவர்களுக்கு தரவேண்டிய தொகையையும் எழுத வேண்டும். எழுதிய இந்த பேப்பரை டப்பாவில் வைத்து அதற்கு மேல் மருதாணி பூக்களை வைக்க வேண்டும். டப்பாவை மூடி விட வேண்டும். இவ்வாறு மூடிய இந்த டப்பாவை பூஜை அறையில் வைத்து நாம் தினமும் வழிபாடு மேற்கொள்ளும் பொழுது இந்த டப்பாவிற்கும் தூப தீப ஆராதனை காட்ட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அந்த வரிசையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு நாம் படிப்படியாக கடன் தொகையை திருப்பித் தருவோம் என்று கூறப்படுகிறது. இந்த மருதாணி பூக்களை வாரத்திற்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும். எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை நாம் செய்கிறோமோ அந்த அளவிற்கு விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினைகள் என்பது தீரும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற பஞ்சமுக தீப வழிபாடு.

இந்த எளிய தாந்திரீக பரிகாரத்தை மருதாணி பூவை வைத்து செய்து நம்முடைய கடன் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம்.

- Advertisement -