கடன் அடைய எருக்கம் பூ பரிகாரம்

cash in hand erukkam poo
- Advertisement -

இன்றைய உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இந்த கடன் பிரச்சனை உள்ளது. அதை அடைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அனுதினமும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இந்த போராட்டத்தின் முடிவில் மீண்டும் கடன் என்னும் அரக்கனின் பிடியில் சிக்கி சின்னா பின்னம் தான் ஆகி விடுகிறோமே தவிர அதிலிருந்து வெளிவந்து நிம்மதியான வாழ்க்கை வாழ முடிவதில்லை.

இந்த கடனால் போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எளிமையான இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது வரை எந்த பரிகாரம் செய்தும் பலன் இல்லை என்பவர்கள் இந்த பரிகாரத்தின் மூலம் நல்ல பலனை பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

கடன் அடைய பரிகாரம்

கடன் அடைய நாம் செய்யக் கூடிய வழிபாடாக இருக்கட்டும், பரிகாரமாக இருக்கட்டும் இரண்டுக்குமே உரிய தினம் செவ்வாய்க்கிழமை தான். ஆகையால் இந்த பரிகாரத்தையும் செவ்வாய்க்கிழமை அன்று செய்வது மிக மிக சிறந்தது. அதிலும் மார்கழியின் இந்த செவ்வாயில் இந்த பரிகாரத்தை தொடங்கினால் மிகவும் நல்லது.

இந்த பரிகாரத்திற்கு ஒரு பிங்க் நிற துணியும் இரண்டு வெள்ளெருக்கு பூவையும் தயாரா செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே செய்து விடுங்கள். அது தான் நல்ல பலனை தரும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் முதலில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த துணியை பூஜை அறையில் விளங்கின் முன்பாக விரித்து வைத்து விடுங்கள். அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமம் இரண்டையும் போட்டு பிறகு இரண்டு எருக்கம் பூவை வைக்க வேண்டும். அடுத்ததாக 11 ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இதற்கு 11 ஒரு ரூபாய் நாணயத்தை தயாராக வைத்து விடுங்கள். இப்போது இதை ஒரு முடிச்சாக கட்டி விடுங்கள்.

இந்த முடிச்சு உங்கள் கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வம் இவர்களை மனதில் நினைத்துக் கொண்டு உங்களுடைய கடன் அடைய வேண்டும் என்று மனமார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் பூஜை செய்யும் போது இந்த முடிச்சுக்கு மேல் ஒரு சிகப்பு நிற மலரை வைத்து கடன் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

இந்தப் பிரார்த்தனையை நீங்கள் தினமும் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய கடன் அடைவதற்கான வாய்ப்புகள் உடனே கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தின் மூலம் உங்களுடைய கடன் அடைந்த பிறகு இந்த முடிச்சை பூஜை அறையில் இருந்து எடுத்து எருக்கம் பூவை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்க கல் உப்பு பரிகாரம்

இந்த 11 ரூபாய் உங்களுடைய பீரோவில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இது உங்களுக்கு பணவரவை ஏற்படுத்துவதுடன் இனி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுத்தாது என்பது தான் இதில் முக்கியமானது. கடன் அடைய செய்யப்படும் இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையுங்கள்.

- Advertisement -