தரித்திரம் நீங்க கல் உப்பு பரிகாரம்

kariya vetri
- Advertisement -

இன்று பல பேருடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை தோல்வி. இதனால் அவர்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியில் செல்லும் இடமெல்லாம் அவமானங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் அவர்களும் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ முயற்சிகளை செய்து கொண்டுதான் இருப்பார்கள் ஆனாலும் தோல்வியைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது.

இதனால் சரியான வருமானம் இருக்காது. சரியான நண்பர்களோ சொந்தங்களோ உடன் இருக்க மாட்டார்கள். அவர்களுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடும் என்னடா வாழ்க்கை ஏன் வாழ்கிறோம் என்று விரக்தி சென்று விடுவார்கள் இவை அனைத்தும் கர்ம வினைகளும் நம்மை பிடித்த தனித்தங்களும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த கர்ம வினைகள் கிரக கோளாறுகள் தரித்திரங்கள் அனைத்தும் நீங்கி அவர்களும் பிறரை போல் சமூகத்தில் நல்ல மதிப்புடன் வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் .

காரியத்தடை நீங்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் இன்றைய தினத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் ஏனெனில் இது ஒரு தாந்திரீக பரிகாரம் தான். இதற்கு பூஜை முறையோ வழிபாடுகளோ கிடையாது. ஆகையால் உங்களுக்கு வசதியான ஒரு நாள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இரவு உறங்கும் முன்பு செய்ய வேண்டும். பகல் நேரத்தில் இதை செய்யக் கூடாது. இந்த பரிகாரம் செய்ய தேவையான இரண்டு பொருட்கள் ஒன்று கண்ணாடி டம்ளர் மற்றொன்று கல் உப்பு. ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பயன்படுத்தும் தண்ணீர் எச்சில் படாத தண்ணீராக இருக்க வேண்டும். அதில் சிறிதளவு கல்லு உப்பை போட்டு விடுங்கள்.

இரவு சாப்பிட்டு முடித்த பிறகு இந்த ஒரு டம்ளர் தண்ணீரை உங்கள் வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே எடுத்து சென்று விடுங்கள். இதை உங்கள் வலது கையில் வைத்து இடது கையை தங்களின் மேல் வைத்து மூடி உங்களுடைய தேவைகள் எந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்பவற்றை எல்லாம் மனதார சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரம் எல்லாவிதமான பிரச்சனைக்கும் ஒரு தீர்வாக இருக்கும். கண் திருஷ்டி, தீய சக்தி, வீட்டில் அடிக்கடி சண்டை வருவது நம்முடைய நேரம் சரியில்லாதது மனக்குழப்பம் இப்படி அனைத்து பிரச்சனைகளுக்கும் இதை செய்யலாம். மனதார பிரார்த்தனை செய்த பிறகு இந்த தண்ணீரை கொண்டு உங்கள் முகம் சுத்தமாக அலம்பிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு வீட்டிற்குள் வந்து விடுங்கள். அவ்வளவு தான் பரிகாரம். இந்த பரிகாரம் செய்யும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரிலும் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து கொடுங்கள். இது உங்களுடைய உடலில் இருக்கும் அனைத்து எதிர்மறை சக்திகளையும் நீக்கி விடும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க சபல ஏகாதேசி தாந்த்ரீக பரிகாரம்

இந்த பரிகாரம் மிக மிக எளிமையானது தான். ஆனால் அதை சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -