தீராத கடன் சுமையை தீர்ப்பதற்கு எளிமையான இந்த 5 விஷயங்களை பின்பற்றி பாருங்கள். எவ்வளவு பெரிய கடனும் வந்த வழி தெரியாமல் சீக்கிரத்திலேயே தீரும்.

kadan1
- Advertisement -

ஒரு மனிதனுக்கு தொடர் தோல்விகள் வரும்போது வாழ்க்கையில் அவன் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. தொடர் கஷ்டங்கள், தோல்விகள் பணப் பற்றாக்குறையை கொடுத்துவிடும். பற்றாக்குறையை சரிசெய்ய குடும்பத்தை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் படுகின்றான். இது விதியின் விளையாட்டு. நம்மால் எதுவுமே செய்யமுடியாது. தீராத கடன் பிரச்சனையில் சிக்கி விட்டோம். அதிலிருந்து வெளிவர வேண்டிய வழியை மட்டும் பார்த்தாலே போதும்.  கடன் சுமையால் சிக்கி அவதிப்பட்டு வருபவர்களுக்கு மிக மிக சுலபமாக ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சில வழிகள் இதோ.

ஒரு மனிதனுக்கு கடன் பிரச்சினை வருகிறது என்றால் அவனுடைய ஜாதகத்தில் கேதுவால் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்றுதான் அர்த்தம். ஜோதிடத்தில் கேதுவிற்கு உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது செவ்வாய். இதனால் தான் செவ்வாய்க்கிழமை அன்று கடனை திருப்பிக் கொடுத்தால் கடன் பிரச்சனை சீக்கிரமே அடையும் என்று நமக்குச் சொல்லப்பட்டு உள்ளது. ஆகவே பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை உங்களால் முடிந்தவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வாய் ஹோரையில் செய்து வருவது சிறப்பு.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று எரும்பு புற்றுக்கு பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து உணவாக போடலாம். அப்படி இல்லை என்றால் மரத்தடியில் எறும்புகள் இருக்கும். மரத்தடியிலும் இந்த தானத்தை எறும்புகளுக்கும் செய்யலாம். குறிப்பாக செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த தானத்தை செய்ய வேண்டும்.

அடுத்தபடியாக கேதுவால் வரக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய சக்தி அனுமனுக்கும், விநாயகப் பெருமானுக்கும் உண்டு. ஆகவே செவ்வாய்க்கிழமை அன்று இவர்களுடைய வழிபாட்டை செய்வது கடன் பிரச்சனையை படிப்படியாகக் குறைக்கும். அதே சமயம் செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் குரங்குகளுக்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுப்பது, யானைக்கு பழங்கள், யானைக்கு தேவையான உங்களால் முடிந்த உணவுப் பொருளை தானமாக கொடுப்பது கடன் பிரச்சினையை தீர்க்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கட்டு கரும்பை வாங்கி கொடுத்தாலும் அது சிறப்புதான். கோவில்களில் யானை இருக்கும் அல்லவா, அந்த யானைகளுக்கும் தானமாக உங்களால் முடிந்த பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

- Advertisement -

செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் சித்தர்கள் சமாதிக்கு சென்று அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து வழிபாடு செய்யவேண்டும். இந்த சித்தர் வழிபாடும் உங்கள் கடன் பிரச்சினைக்கு கைமேல் பலனை கொடுக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக நிறைய கடன் பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று மீன் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள கூடாது. செவ்வாய்க் கிழமைகளில் குளங்கள் ஏரிகளில் உள்ள மீன்களுக்கு இறையாக உங்களால் முடிந்த பொருட்களை வாங்கிப் போடவேண்டும். ஒரு பாக்கெட் பொறி போட்டால் கூட அதன்மூலம் நல்ல பலனை பெறலாம். மேல் சொன்ன விஷயங்களில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒவ்வொரு பரிகாரங்கள் ஆக மாறி மாறி செய்து வந்தாலும் சரிதான். ஆனால் ஒரே வாரம் ஒரே பரிகாரத்தை செய்துவிட்டு, பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. சின்ன சின்ன பரிகாரங்கள். எல்லாமே சக்தி வாய்ந்த பரிகாரங்கள். நம்பிக்கையோடு தொடர்ந்து பரிகாரங்களை செய்தால் நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -