கோடிக் கடனும் காணாமல் போக இந்த ஆடி அமாவாசை பரிகாரத்தை இன்று மாலை நேரத்தை தவற விடாமல் பயன்படுத்திக் செய்து விடுங்கள். கடனை அடைக்க இது போன்றதொரு வாய்ப்பு இனி கிடைக்காது.

amman cash amavasai
- Advertisement -

கடன் என்பதே நமக்கு பெரிய கர்மாவை போன்றது தான். ஆனால் இந்த கடன் ஏற்படுவதை நம்முடைய கர்ம வினை தான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. ஒருவர் இந்த பிறவியில் கடன் தொல்லையில் பெரிதும் ஊழன்று கொண்டிருந்தால் அது முற்பிறவியில் நாம் செய்த கர்மவினைகளில் பலனாகத் தான் இப்போது அதை அனுபவிக்கிறோம் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய கர்ம வினை தீர்ந்து கடன் என்னும் பெரிய தொல்லையிலிருந்து வெளிவர இந்த அற்புதமான ஆடி அமாவாசை பரிகாரம் கை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

கோடிக்கடனும் காணாமல் போக அமாவாசை பரிகாரம்
இந்த பரிகாரத்தை இன்று மாலை 6 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும் அதற்குள்ளாக பரிகாரத்திற்கு தேவையான இந்த பொருட்களை எல்லாம் வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள் ஒரு முழு தேங்காய் அடுத்து சிகப்பு நிற நூல் அதேபோல் இந்த தேங்காயை சுற்றி கட்டும் அளவிற்கு சிறப்பு நிறத்திலான ஒரு துணி.

- Advertisement -

இன்றைய இந்த ஆடி அமாவாசை தினத்தில் உங்களுடைய பித்ரு கடன்களை முதலில் முறையாக முடித்து விடுங்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது வீட்டில் படையல் வைத்து வணங்குவது போன்றவற்றையெல்லாம் சிறப்பாக செய்ய வேண்டும்.அதே போல் உங்களுடைய குலதெய்வ வழிபாட்டையும் இன்றைய நாளில் செய்ய தவறாதீர்கள். குலதெய்வ கோவில் அருகில் இருந்த அங்கு சென்று ஒரு வழிபாடு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை குலதெய்வ கோவில் வெகு தொலைவில் இருந்தால் குலதெய்வ புகைப்படத்தை வீட்டில் வைத்து அவர்களை நினைத்து ஒரு தெய்வம் ஏற்றியாவது இன்றைய தினம் வழிபடுவது மேலும் நல்ல பலனை கொடுக்கும்.

இவையெல்லாம் செய்த பிறகு மாலை வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு இந்த சிகப்பு நிற நூலை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் யார் பெயரில் கடன் அதிகம் இருக்கிறதோ அல்லது யார் கடன் வாங்கி இருக்கிறார்கள் அவர்களின் முழு நீள அளவிற்கு இந்த சிவப்பு நிற நூலை அளந்து கொள்ளுங்கள். அவர்கள் எத்தனை அடி உயரமும் அத்தனை அடி உயரத்திற்கு அளந்து இந்த நூலை நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த நூலை நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தேங்காயில் முழுவதுமாக சுற்ற வேண்டும்.

- Advertisement -

தேங்காயில் நூல் சுற்றிய பிறகு சிகப்பு நிற துணியில் இந்த தேங்காயை வைத்து ஒரு முடிச்சாக கட்டியே பிறகு இதை கையில் எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு செல்ல வேண்டும். இந்த பரிகாரத்தை நிச்சயம் கடற்கரையில் தான் செய்ய வேண்டும் மற்ற இடங்களில் செய்யக் கூடாது. கடற்கரைக்கு சென்று உங்கள் கால் கடலில் தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு நின்று கொண்டு நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ எந்த காரணத்திற்காக வாங்கினீர்களோ அது குறைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு இந்த தேங்காயை வலது புறமாக உங்கள் தலையை சுற்றி மூன்றும் முறை சுற்றிய பிறகு கடலில் தூக்கிப் போட்டு விடுங்கள்.

அதன் பிறகு திரும்பி பார்க்காமல் நேராக உங்கள் வீட்டிற்கு வர வேண்டும் வீட்டிற்குள் வந்தவுடன் நேராக உள்ளே செல்லாமல் வெளியில் கை கால் முகம் எல்லாம் அளப்பிய பிறகு நேராக பூஜை அறைக்கு சென்று மறுபடியும் உங்கள் குல தெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை அமாவாசை தினங்களில் தொடர்ந்து செய்யலாம். ஆனால் இந்த அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை தொடங்குவது மேலும் சிறப்பு. ஏனென்றால் ஆடி அமாவாசை என்பது முக்கியமான ஒரு தினமாக கருதப்படுகிறது. இது தெய்வ வழிபாட்டிலும் முக்கியமான நாள் எனவே இந்த நாளில் இந்த பரிகாரத்தை தொடங்குவது நல்லது.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருளை இப்படி இரவு நேரத்தில் தானமாக வழங்குவதால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, செல்வம் பெருகி, நிம்மதியுடன் வாழலாம்.

இதன் பிறகு உங்கள் கடன் அடைவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் தொடர்ந்து இதை செய்து உங்களுடைய பெரும் கடனிலிருந்து வெளிவந்து கடன் இல்லாத ஒரு பெருவாழ்வு வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -