கடலளவு கடனையும் காணாமல் போக செய்ய ஒரே ஒரு கல் உப்பு போதும். கடன் அடைய மிக மிக சுலபமான பரிகாரம்.

- Advertisement -

கடன் என்னும் இந்த கொடிய அரக்கன் ஒரு முறை நம் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் வாழ்க்கையே ஒன்றும் இல்லாமல் சீர்குலைந்து போய் விடும். கடனால் துன்பப்படும் எத்தனையோ குடும்பங்களை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். இப்படி கடனில் சிக்கித் தவிப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் கடனானது காணாமல் போகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் தொடர்ந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

கடன் இல்லா வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை. ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று கடனை வாங்கி அவஸ்தைப்படாமல், இருப்பதை கொண்டு நிம்மதியாக வாழ பழகிக் கொள்ளுங்கள். இதிலும் ஒரு சிலரிடம் வாங்கிய கடனை மட்டும் அடைக்கவே முடியாது. எவ்வளவு பணம் வந்தாலும் அவர்களிடம் மட்டும் திருப்பிக் கொடுக்க நேரமே அமையாது. இப்படி கடன் சம்பந்தமாக எந்த பிரச்சனை இருந்தாலும், அதற்கு உப்பை வைத்து இப்படி தீபம் ஏற்றும் போது கடனானது காணாமல் போகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

கடன் தீர ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்தை நாம் வீட்டில் ஏற்றக் கூடாது அரச மரத்தடியில் தான் ஏற்ற வேண்டும். அரசமரம் ஆலயத்தில் இருந்தாலும் ஏற்றலாம் அல்லது தனியாக இருந்தாலும் ஏற்றலாம். அரசமரத்தடி விநாயகர் இருந்தால் அங்கும் ஏற்றலாம். இந்த தீபத்தை அரச மரத்தின் அடியில் மாலை 6.30க்குள் ஏற்ற வேண்டும். அதற்கு மேல் தீபம் ஏற்றக் கூடாது.

ஏனென்றால் விருட்சகங்கள் மாலை நேரத்தில் உறங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகிறது. அந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்தால் பலன் அளிக்காது. எனவே மாலை 4 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்ளாக இந்த தீபத்தை ஏற்றி விடுவதே சிறந்தது.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்ற ஒரு அகல் விளக்கு எடுத்து அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். இரட்டைப் பஞ்சு திரியை ஒன்றாக திரட்டி ஒரே திரியாக தயார் செய்து கொள்ளுங்கள். கடன் அடைய ஏற்றப் படும் இந்த தீபத்தை கடுகு எண்ணெய் கொண்டு தான் ஏற்ற வேண்டும். மற்ற எந்த எண்ணெய்யும் வைத்து ஏற்றக் கூடாது. இத்துடன் கையில் ஒரே ஒரு கல்லுப்பையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் எடுத்து சென்று அரச மரத்தடியில் விளக்கை வைத்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றியவுடன் அந்த கல்லுப்பை எண்ணெயில் போட்டு விட வேண்டும்.

இந்த தீபத்தை 21 நாட்கள் அல்லது 41 நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். பெண்கள் ஏற்றும் போது அந்த நான்கு நாட்கள் ஏற்றாமல், அடுத்த ஐந்தாவது நாட்களில் இருந்து தொடர்ந்து ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு உழைத்தும் பணம் சேரவில்லையா? 50 ரூபாய் சம்பாதித்தால் 100 ரூபாய்க்கு செலவு வருகிறதா? இதை எல்லாம் செய்தால் போதும் உங்களுக்கு வேண்டிய அளவிற்கான பணம் உங்கள் கையில் தங்க துவங்கும்.

கடன் என்பது நம் கர்மவினையின் பலனாக ஏற்படுவது தான். ஒரு சிலருக்கு ஏற்றிய சிறிது நாட்களிலே மாற்றம் தெரியும். ஒரு சிலர் தொடர்ந்து ஏற்றி வர, வர நிச்சயம் அவர்களுக்கு மாற்றம் தெரியும். நம்பிக்கையுடன் இந்த தீபத்தை ஏற்றி கடனை அடைத்து கடனில்லா நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -