கழுத்தை நெரிக்கும் கடனில் இருந்தும் உங்களை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் எதிரிகளின் தொல்லையிலிருந்தும் வெளிவர வளர்பிறை அஷ்டமி நாளான இன்று இரவுக்குள் பைரவருக்கு இந்த இரண்டு தீபத்தை ஏற்றி விடுங்கள்.

- Advertisement -

ஒரு மனிதனின் வாழ்க்கையை நிலை குலைந்து போக செய்யக்கூடிய ஆற்றல் ஒன்று இருக்குமே ஆனால் அது நிச்சயம் கடனாக தான் இருக்கும். மற்றொன்று நம் உடனே இருந்து கொண்டு நம்மை வாழ விடாமல் செய்யும் துரோகிகளும் எதிரிகளும் தான் இவர்களிடம் இருந்து நம்மை காத்து நல்ல முறையில் வாழ வைக்கக் கூடிய கடவுளாக விளங்குபவர் இந்த பைரவர். சிவ பெருமானின் ருத்தர ரூபமாக விளங்குபவர். இந்த பைரவர்களையே எட்டு வகையாக பிரித்து வணங்கி வருகிறோம். அதில் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பவராக விளங்குபவர் கால பைரவர்.

இவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகளையும், எட்டு திசைகளையும் மட்டுமல்லாமல் பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், ஏன் காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் இருக்கிறார்.ஆகையாலே இந்த பைரவருக்கு கால பைரவர் என்று ஒரு சிறப்பு பெயரும் உண்டு. இப்போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பத்தை எல்லாம் தீர்க்க இவரை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர பைரவ வழிபாடு
அஷ்டமி திதி இருக்கும் நாளில் இவரை வணங்குதல் மிகவும் சிறப்பு அதிலும் வளர்பிறை அஷ்டமி நாளில் இவரை ராகு காலத்தில் வணங்குவது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும். அந்த நேரத்தில் இந்த தீப பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் இன்றைய நாள் முழுவதுமே செய்யலாம் தவறில்லை. இன்றைய நாளில் பைரவருக்கு ராகு காலத்தில் அபிஷேக அர்ச்சனைகள் நடக்கும் அந்த நேரத்தில் நாம் ஆலயத்தில் இருப்பது நல்லது.

இந்த நாளில் அபிஷேகத்திற்காக உங்களால் கொடுக்க முடிந்த பொருள்களை வாங்கி கொடுக்கள். அது மட்டும் இன்றி இவருக்கு செவ்வரளி பூக்களை சாற்றுவது மிகவும் விஷேசம். ஆகையால் செவ்வரளி மாலையில் வாங்கி கொடுக்கலாம் அல்லது செம்பருத்தி மலரை தரலாம். இந்த பரிகாரத்தை செய்ய வீட்டிலிருந்து சில பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மூன்று மண் அகலை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு சிறிய சிகப்பு நிறத்துண்டின் 27 மிளகை முடிச்சாக கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒரு எண்ணையை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் நெய்யும் சேர்த்து எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

இந்த தீபத்தை நீங்கள் ராகு காலத்தில் நேரத்தின் போது ஏற்றுவதாக இருந்தால் அபிஷேகம் முடிந்த பிறகு பைரவருக்கு முன்பாக இதை ஏற்றுங்கள் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வைரவருக்கு முன்பு ஏற்றலாம் . ஒரு அகலில் மிளகு மூட்டையை வைத்த பிறகு அதில் நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றி வைரவருக்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றுங்கள். இந்த தீபம் ஏற்றும் போது நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அந்த கடன் விரைவில் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஏற்றுங்கள். அதன் பிறகு பைரவரை 8 சுற்று சுற்றி வந்து விடுங்கள். இந்த தீபத்தை 8 அஷ்டமிகள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். இதனால் உங்களை வாட்டி வதைக்கும் கடன் தொல்லையிலிருந்து விரைவில் வெளிவந்து விடலாம்.

எதிரி தொல்லைகள் இன்றி நிம்மதியாக வாழ
இதற்கும் நாம் தீபத்தை தான் ஏற்ற வேண்டும். நாம் எடுத்து வைத்திருக்கும் அகலில் மீதம் இருக்கும் இரண்டு அகலில் பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு இதை பைரவருக்கு முன்பாக ஏற்றி உங்களுடைய எதிரி யாரோ அவரின் பெயரை மனதில் நினைத்து அவர் தொல்லை இன்றி நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு வேளை யாரென்று தெரியாத பட்சத்தில் எந்த துன்பத்தில் இருக்கிறீர்களோ அதை பைரவரிடம் சொல்லி மனதார வேண்டிக் கொண்டு இதே போல் எட்டு சுற்று சுற்றி வாருங்கள் இதையும் எட்டு முறை அஷ்டமியில் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த பொருளால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து அவரை வழிபட்டால் அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு, செல்வ செழிப்பும் ஏற்படும்.

அஷ்டமியில் இந்த முறையில் பைரவரை வணங்கி வரும் போது நம்முடைய கடன் தொல்லை எதிரி தொல்லை மட்டும் இல்லை வாழ்க்கையில் நமக்கு எந்த விதமான தொல்லைகள் இருந்தாலும் அனைத்திலிருந்தும் நம்மை விடுவித்து நல்ல ஒரு நிம்மதியான செல்வ செழிப்பான வாழ்க்கையை அவர் தருவார். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை செய்து பலனடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -