ராகு கால நேரத்தில் இந்த இலையை எரிப்பதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை விரைவாக அடைய வழி பிறக்கும்

biriyani-ilai
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது விசேஷம் என்றாலும், பண்டிகை என்றாலும் அல்லது தொழில் துவங்க வேண்டும் என்று நினைத்தாலும் கையில் இருக்கும் பணம் பத்தாமல் போகும் பொழுது கடன் வாங்க வேண்டிய கட்டாயம் வருகிறது. அவசரத்திற்கு தேவை என்று அந்தத் தொகைக்கான வட்டியை பற்றிக்கூட கவலை கொள்ளாமல் கடன் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் வட்டி மட்டும் கட்டிக் கொண்டே இருக்கின்ற நிலைமை இருந்து கொண்டிருக்கும். இதுபோன்ற நேரங்களில் சற்று எரிச்சலாகவும், வெறுப்பாகவும் இருக்கும். சம்பாதித்த பணம் அனைத்தும் வட்டி கட்டுவதற்கே செலவாகிறது என்று. இதுபோன்ற கடன் பிரச்சனைகளில் இருந்து விரைவாக வெளிவர இந்த சக்தி வாய்ந்த பிரியாணி இலை பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அவசரத்திற்கு வாங்கும் கடன் தொகை சிறிது காலத்திற்குப் பிறகு நமது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு பெரியதாக மாறிவிடும். ஒரு சிலரால் மாதம் தோறும் வட்டியை கூட சரியாக கட்ட முடியாமல் போய்விடும். இவை அனைத்தும் சேர்ந்து மொத்தமாக பெரிய தொகையாக சேர்ந்துவிடும். இதுபோன்ற நேரங்களில் இந்த கடனை எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் அதற்கான வழி கிடைப்பதில்லை.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் கடன் கொடுத்தவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டு முன் வந்து பிரச்சனை செய்து விடுவார்கள். எனவே இது போன்ற தருணத்தை எண்ணி மனம் எப்போதும் பயத்துடன் தான் இருக்கும். வரக்கூடிய பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்ற யோசனையிலேயே பல நேரங்களில் செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.

இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வருவதற்கு நிச்சயம் இறையருள் கிடைக்கப்பெற வேண்டும். அப்படி இறைவனின் அருளைப் பெறுவதற்காக செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரம் தான் இந்த ராகு காலத்தில் செய்யக்கூடிய பிரியாணி இலை பரிகாரம். இதற்கு தேவைப்படுவது இரண்டு பிரியாணி இலை மற்றும் ஒரு அகல் விளக்கு தீபம்.

- Advertisement -

இதனை செவ்வாய்க்கிழமை அன்று ராகு கால நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும். செவ்வாய்கிழமை அன்று மாலை ராகு கால நேரத்தில் 03 PM – 04:30 PM  முதலில் ஒரு அகல் தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு பிரியாணி இலையில் உங்களுக்கு இருக்கும் கடன் தொகையை எழுதி, இந்தக் கடன் தொகை விரைவில் அடைய வேண்டும் என எழுதிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு எழுதும் பொழுது அதில் சிவப்பு நிற மையிலோ அல்லது பச்சை நிற மையிலோ எழுதக் கூடிய பேனாவை கொண்டு எழுத வேண்டும். பின்னர் இந்த பிரியாணி இலையை அகல் தீபத்தின் சுடரில் காண்பித்து எரியவிட வேண்டும். பிறகு இவை எரிந்து முடிந்ததும் அதனை ஒரு சிறிய தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கரித்துகளை கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும்.

- Advertisement -